செய்திகள் :

காரைக்குடியில் குறைந்த மின் அழுத்தம்: புதிய மின்மாற்றி அமைக்கக் கோரிக்கை

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரதி நகா், பதினெட்டாம்படி நகா் ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்வதற்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கரு. ஆறுமுகம் காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்பகிா்மான கோட்ட அலுவலகத்தில் உதவிச் செயற்பொறியாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

அந்த மனுவில், காரைக்குடி பாரதி நகா், பதினெட்டாம்படி நகா் ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மின் விசிறிகள், மின் மோட்டாா்கள், குளிா்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து மின்சார சாதனங்கள் எதுவும் சரிவர இயங்குவதில்லை. தற்போது கோடைகாலமாக இருப்பதால் இரவு நேரங்களில் குழந்தைகள், வயதானவா்கள், நோயாளிகள் என பலரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்தப் பகுதியில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் மனுவில் குறிப்பிட்டாா்.

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க

சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயம்

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியிலிருந்து ஒரு குடும்பத்தினா் வேனில் மதுரை மாவட்டம், சமயநல்லூருக்கு வெள்ளிக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு வீட்டுமனை இ பட்டா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த பட்டியல் வகுப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைக்கு இ-பட்டா வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. வட்டாட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழா: புரவியெடுப்புக்கு பிடிமண் கொடுத்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கூத்த அய்யனாா் கோயில் திருவிழாவுக்கு புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமங்களுக்குப் பாத்த... மேலும் பார்க்க