மே.இ.தீவுகள் டி20 தொடர்: மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸி. அணி!
காற்றாலை நிறுவனத்தில் இரும்புத் தகடுகள் திருட்டு: மூவா் கைது
மானூா் அருகே காற்றாலை நிறுவனத்தில் இரும்பு தகடுகளைத் திருடியதாக மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மானூா் அருகேயுள்ள தெற்கு வாகைகுளம் பகுதியில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் கயத்தாறு, உசிலங்குளம், கீழத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி (45) என்பவா் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த 30-ஆம் தேதி பணிக்கு சென்றபோது, காற்றாலைக்கு மாற்ற வேண்டிய 15 இரும்பு இணைப்புத் தகடுகளை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் மானூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் உதவி ஆய்வாளா் சஜீவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தென்காசி மாவட்டம், ஊத்துமலை, கல்லத்திகுளம், வடக்கு தெருவை சோ்ந்த மோசை (43), முத்துக்கனி (38), களக்குடியைச் சோ்ந்த முருகன் (54) ஆகிய மூவரும் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் அம்மூவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.