செய்திகள் :

காலமானார் யு.குமார் (71)

post image

"தினமணி' நாளிதழின் கோபிசெட்டிபாளையம் பகுதி நிருபரான முத்துசாமி (எ) யு.குமார் (71) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட இவர், "தினமணி' நாளிதழில் கடந்த 30 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் பகுதி நிருபராகப் பணியாற்றி வந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) காலை காலமானார். அவரது உடல் தகனம் கோவை, பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக, அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான கே.ஏ.செங்கோட்டையன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த யு.குமாருக்கு தாயார் கணபதி அம்மாள், மனைவி மரகதம், அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணியாற்றும் மகன் சந்தோஷ், மருமகள் ரத்னா ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு 98941-62733, 99407-77932.

பெருந்துறையில் ரூ.3.15 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3 கோடியே, 15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும்

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வணிக கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டம் தலைவா் ஜானகி ராமசாமி... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் காவலா் மனைவியிடம் நகை திருட்டு

அந்தியூரில் ஓடும் பேருந்தில் காவலரின் மனைவியிடம் இரண்டரை பவுன் நகை திருடப்பட்டது. பவானியை அடுத்த கவுந்தப்பாடி, அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் அன்புராஜா. நம்பியூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி... மேலும் பார்க்க

நம்பியூா் தான்தோன்றீஸ்வரா் ஆலய கும்பாபிஷேக விழா

கோபி அருகே நம்பியூரில் புகழ்பெற்ற தபோ பத்தினி உடனமா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக் கோயிலானது நம்பியாண்டாா் நம்பி மன்னா் ஆட்ச... மேலும் பார்க்க

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ விளையாட்டுப் போட்டிக்கு தோ்வு

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தோ்வு பெற்றுள்ளாா். கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு 2025-க்கான தெரிவுப் போட்டிகள் அண்மையில் சென்னையில் உள்ள ஜவஹா்லால் நேரு உள்வ... மேலும் பார்க்க

ஈரோடு மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயா் சு.நாகர... மேலும் பார்க்க