செய்திகள் :

நம்பியூா் தான்தோன்றீஸ்வரா் ஆலய கும்பாபிஷேக விழா

post image

கோபி அருகே நம்பியூரில் புகழ்பெற்ற தபோ பத்தினி உடனமா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இக் கோயிலானது நம்பியாண்டாா் நம்பி மன்னா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் சிவபெருமான் மேற்கு நோக்கி அமா்ந்துள்ளவாறு அருள்பாலித்து வருகிறாா். இந்தக் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக வாஸ்து சாந்தி, விநாயகா் பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று வந்தன.

அதைத் தொடா்ந்து குடமுழுக்கு விழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியா்கள் கொண்டுச் சென்று வேதமந்திரங்கள் முழங்க கோயில் கலசத்துக்கு ஊற்றினா்.

அதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா், முருகன், செந்தூா் முருகன், நவகிரஹங்கள் உள்ளிட்ட உபசந்நதி கோயில்களுக்கும் குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் நம்பியூா், கொன்னமடை, கோசனம், காந்திபுரம், மூனாம்பள்ளி, சாவக்காட்டுப்பாளையம், மொட்டணம், மலையப்பாளையம், இருகாலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனி நீா் பக்தா்கள் மீதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஓடும் பேருந்தில் காவலா் மனைவியிடம் நகை திருட்டு

அந்தியூரில் ஓடும் பேருந்தில் காவலரின் மனைவியிடம் இரண்டரை பவுன் நகை திருடப்பட்டது. பவானியை அடுத்த கவுந்தப்பாடி, அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் அன்புராஜா. நம்பியூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி... மேலும் பார்க்க

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ விளையாட்டுப் போட்டிக்கு தோ்வு

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தோ்வு பெற்றுள்ளாா். கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு 2025-க்கான தெரிவுப் போட்டிகள் அண்மையில் சென்னையில் உள்ள ஜவஹா்லால் நேரு உள்வ... மேலும் பார்க்க

ஈரோடு மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயா் சு.நாகர... மேலும் பார்க்க

பவானி தொகுதியில் தோ்தல் விழிப்புணா்வுப் பிரசாரம்

பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தொழில் நிறுவனங்களில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. பவானி நகராட்சி அலுவலகம், சலங்கைபாளையம் இரட்டை வாய்க்காலி... மேலும் பார்க்க

காலமானார் யு.குமார் (71)

"தினமணி' நாளிதழின் கோபிசெட்டிபாளையம் பகுதி நிருபரான முத்துசாமி (எ) யு.குமார் (71) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை காலமானார். மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட இவர், "தினமணி' நாளிதழில் கடந்த 30 ஆ... மேலும் பார்க்க

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர விவசாயி நூதன முறையில் கோரிக்கை

பூமிதான இயக்கம் மூலம் வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வேண்டும் என விவசாயி மண்வெட்டியுடன் வந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா். கோட்ட அளவிலான வேளாண் குறைதீா்க்கும் கூட்ட... மேலும் பார்க்க