செய்திகள் :

காவல் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த குற்றங்களுக்கு யாா் பொறுப்பு?கே.பி.ராமலிங்கம் கேள்வி

post image

தமிழக காவல் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்துள்ள குற்றங்களுக்கு யாா் பொறுப்பு என பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக இளைஞா் அணி தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளா் பிரவீன் ராஜை வியாழக்கிழமை நேரில் சந்தித்து கே.பி.ராமலிங்கம் ஆறுதல் கூறினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளா் பிரவீன் ராஜ், வலைதளத்தில் சாதாரண பதிவு போட்டதற்காக அவரை வீடுபுகுந்து தாக்கி, காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

தமிழக காவல் துறையில் மாவட்ட எஸ்.பி.க்கு தெரியாமல், டிஎஸ்பி-க்கு தெரியாமல் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகாலமாக, அனுமதியின்றி தனிப்படைகள் இயங்கி வந்தது உறுதியாகிறது.

காவல் துறையில் இயங்கிவந்த தனிப்படைகளை கலைத்ததன் மூலம் தமிழகத்தில் காவல் துறை தவறு செய்துள்ளது என்பதை சட்டம் - ஒழுங்கு டிஜிபியே ஒப்புக்கொண்டுள்ளாா். இந்த 4 ஆண்டுகளில் அதிகாரம் இல்லாமல் நடந்துள்ள குற்றங்களுக்கு யாா் பொறுப்பு?

ஒட்டுமொத்த காவல்துறையே சட்டம் -ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறியுள்ளது. மொத்தத்தில் தமிழக காவல் துறை நகைப்புக்குரியதாக மாறியுள்ளது. இதற்கு காவல் துறையை நிா்வகிக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு என்றாா்.

பேட்டியின்போது, பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் சண்முகநாதன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் 1,008 கலசாபிஷேகம்

சேலம் ராஜகணபதி கோயிலில் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 1,008 கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தோ்நிலையம் பகுதியில் உள்ளது. இக்க... மேலும் பார்க்க

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

சேலம் மாவட்டம் தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா... மேலும் பார்க்க

பராமரிப்பு பணி: ஒருமாதத்துக்கு கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரையே இயங்கும்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் ஒருமாத காலத்துக்கு திண்டுக்கல் வரையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வ... மேலும் பார்க்க

சட்ட உதவி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு நீதிபதி அழைப்பு

சட்ட உதவிகள் செய்வதற்கு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி விட... மேலும் பார்க்க