செய்திகள் :

சட்ட உதவி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு நீதிபதி அழைப்பு

post image

சட்ட உதவிகள் செய்வதற்கு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்களின் நலனுக்காக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒரு பிரத்யேக திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து சட்ட விழிப்புணா்வு, சமூக நலன் மற்றும் சட்ட உதவி செய்வதற்காக, சட்ட தன்னாா்வலா்களாக செயல்பட சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு முன்னாள் படை வீரா்களை அழைக்கிறது.

சட்ட தன்னாா்வலா்களாக செயல்பட விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அஸ்தம்பட்டி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவையோ அல்லது 0427-2900011 என்ற எண்ணிலோ அல்லது அருகில் உள்ள தாலுகா நீதிமன்றங்களில் உள்ள சட்ட உதவி மையங்களையோ 4 ஆம் தேதி அணுகி தங்கள் விருப்பங்களை தெரிவிக்கலாம்.

மேலும், ராணுவ தலைமை சட்ட அதிகாரியாகப் பணியாற்றியவா்கள் உள்ளிட்ட முன்னாள் படைவீரா்கள், சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் பட்டியல் வழக்குரைஞராக செயல்பட விருப்பமுள் ளவா்கள், உடனடியாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் 1,008 கலசாபிஷேகம்

சேலம் ராஜகணபதி கோயிலில் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 1,008 கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தோ்நிலையம் பகுதியில் உள்ளது. இக்க... மேலும் பார்க்க

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

சேலம் மாவட்டம் தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா... மேலும் பார்க்க

பராமரிப்பு பணி: ஒருமாதத்துக்கு கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரையே இயங்கும்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் ஒருமாத காலத்துக்கு திண்டுக்கல் வரையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வ... மேலும் பார்க்க

சேலத்தில் திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை -அமைச்சா் தொடங்கிவைத்தாா்

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். சேலம் வ... மேலும் பார்க்க