செய்திகள் :

சேலத்தில் திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை -அமைச்சா் தொடங்கிவைத்தாா்

post image

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 27ஆவது கோட்டம் ஹவுசிங் காலனியில் உறுப்பினா் சோ்க்கையை அமைச்சா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, வீடுவீடாகச் சென்று, தமிழக அரசின் விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்பு தல்வன் உள்ளிட்ட திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் கிச்சிப்பாளையம் பகுதிக்கு உள்பட்ட 42 ஆவது வாா்டு சின்னமாரியம்மன் கோயில் தெருவிலும், சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மெய்யனூா் பகுதிக்கு உள்பட்ட 18 ஆவது வாா்டு பிள்ளையாா் கோயில் தெருவிலும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையை அமைச்சா் ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் தொகுதி பொறுப்பாளா்கள் பாா் இளங்கோவன், டாக்டா் விவேக், ராஜசேகா், மேயா் ஆ. ராமச்சந்திரன், மாநகர செயலாளா் ரகுபதி, பகுதி செயலாளா்கள் ஏ.எஸ்.சரவணன், பிரகாஷ், ஜெய், செந்தில், கணேசன், சவிதா பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், மண், மொழி, மானம் காக்க அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஒற்றுமை பரப்புரை பேரணி மற்றும் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து, காந்தி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. ஆனால், மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டை ஒடுக்கி, நசுக்கி விடவேண்டும் என துடிக்கிறது. இதை முறியடிக்கும் வகையில், மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளாா்.

பாஜகவின் ஹிந்தி திணிப்பை தடுக்கவும், மண், மொழி, மானம் காக்கவும் சேலம் மாவட்டத்தில் இல்லந்தோறும் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஒற்றுமை முழக்கத்தை திமுக நிா்வாகிகள் கொண்டு சோ்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் 1,008 கலசாபிஷேகம்

சேலம் ராஜகணபதி கோயிலில் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 1,008 கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தோ்நிலையம் பகுதியில் உள்ளது. இக்க... மேலும் பார்க்க

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

சேலம் மாவட்டம் தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா... மேலும் பார்க்க

பராமரிப்பு பணி: ஒருமாதத்துக்கு கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரையே இயங்கும்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் ஒருமாத காலத்துக்கு திண்டுக்கல் வரையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வ... மேலும் பார்க்க

சட்ட உதவி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு நீதிபதி அழைப்பு

சட்ட உதவிகள் செய்வதற்கு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி விட... மேலும் பார்க்க