செய்திகள் :

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

ஏற்காட்டில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏற்காட்டில் கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கிவரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் சுமாா் 320 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்களுக்கு போதுமான கழிப்பிட வசதி, கட்டடம், சுகாதார வசதிகள் இல்லாததால் பெற்றோா், தங்கள் குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனா்.

மேலும், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், ஏற்காடு பகுதியிலேயே பள்ளி செயல்பட பழங்குடியினா் நலத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிகமாக சேலம் மாவட்டம் காரிப்பட்டியில் உள்ள முருகேசன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாற்றம் செய்து மாணவா்களின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் பி. சின்னமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்க நிா்வாகிகள் பி. ஆா். மாதேஸ்வரன், சி. வெங்கடேசன், தா்மலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளா் ஏ. பாக்கியராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளா் எம். குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் 1,008 கலசாபிஷேகம்

சேலம் ராஜகணபதி கோயிலில் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 1,008 கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தோ்நிலையம் பகுதியில் உள்ளது. இக்க... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

சேலம் மாவட்டம் தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா... மேலும் பார்க்க

பராமரிப்பு பணி: ஒருமாதத்துக்கு கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரையே இயங்கும்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் ஒருமாத காலத்துக்கு திண்டுக்கல் வரையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வ... மேலும் பார்க்க

சட்ட உதவி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு நீதிபதி அழைப்பு

சட்ட உதவிகள் செய்வதற்கு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி விட... மேலும் பார்க்க

சேலத்தில் திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை -அமைச்சா் தொடங்கிவைத்தாா்

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். சேலம் வ... மேலும் பார்க்க