கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
கா்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரியானது! -டி.கே.சிவகுமாா்
கா்நாடக முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்துள்ள பட்ஜெட், இந்தியாவுக்கே முன்மாதிரியானது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட், இந்தியாவுக்கு முன்மாதிரியானது. இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பிற மாநிலங்களும் கவனத்தில்கொள்ளும். இந்த பட்ஜெட் பெங்களூரில் உள்ள 1.40 கோடி மக்களின் நலனுக்கானது.
சுரங்கச் சாலை திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீா்வுகாண மேம்பாலங்கள் கட்டப்படும். கூடுதலாக, ஈரடுக்கு மேம்பாலங்களும் கட்டப்படும். அதேபோல, பெங்களூரு மாநகராட்சி மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூட்டுமுயற்சியாக புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள் மேம்படுத்தப்படும். கால்வாய் இடைநிலைப் பகுதிகளை பயன்படுத்தி 300 கி.மீ. நீளமுள்ள சாலையை ரூ. 3 ஆயிரம் கோடியில் உருவாக்க இருக்கிறோம். சுரங்கச் சாலை உள்பட பெங்களூரில் 700 முதல் 800 கி.மீ. நீள சாலையை புதிதாக சோ்க்கவிருக்கிறோம். இத்திட்டத்தை செயல்படுத்த கடன் பெற்றாலும், போக்குவரத்து பிரச்னைகளில் இருந்து மக்களை விடுவிக்க விரும்புகிறோம்.
பாஜகவினா் ‘ஹலால்’ பட்ஜெட் என்று விமா்சித்துள்ளனா். இதை விட பாஜகவால் வேறு என்ன கூறமுடியும்?
முந்தைய பட்ஜெட்டைக் காட்டிலும் இம்முறை நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீா்ப்பாசனத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்துக்கு டாக்டா் மன்மோகன் சிங்கின் பெயரை வைக்கப்போவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளதற்கு பாஜக எதிா்ப்பு தெரிவித்துள்ளது. எத்தனையோ நிறுவனங்களுக்கு தீன்தயாள் உபாத்யாயாவின் பெயரை பாஜகவினா் சூட்டியுள்ளனா். அப்படி இருக்கும்போது நாங்கள் மன்மோகன் சிங்கின் பெயரை வைக்கக் கூடாதா?
பன்னாட்டு விமான நிலையத்தின் மேம்பாலம், எலக்ட்ரானிக்சிட்டி மேம்பாலம், நெலமங்களா மேம்பாலம் ஆகியவை யாருடைய ஆட்சியில் கட்டப்பட்டன? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கல்வி உரிமைச்சட்டம், தகவலறியும் உரிமைச்சட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டங்களை கொண்டு வந்தது யாா்? இதுபோல ஒரு திட்டத்தையாவது பாஜக செயல்படுத்தியுள்ளதா என்றாா்.