செய்திகள் :

கூட்டுப்பாலியல் பலாத்கார சம்பவம்: முதல்வா் சித்தராமையா கண்டனம்

post image

ஹம்பி அருகே சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவத்தை முதல்வா் சித்தராமையா வன்மையாகக் கண்டித்துள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வா் சித்தராமையா குறிப்பிட்டுள்ளதாவது:

கொப்பள் மாவட்டத்தின் சானாப்பூரில் நிகழ்ந்துள்ள கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம், மிகவும் கொடூரமானது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சம்பவம் தொடா்பாக புகாா் வந்ததும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெற்றேன். விசாரணை விவரங்களை முழுமையாக கேட்டறிந்தேன். இதற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மாநிலத்துக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதற்கு எனது அரசு உறுதியாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தனது எக்ஸ் வலைதளத்தில், ‘கூட்டுப் பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கேட்கும்போது மனம் பதைபதைக்கிறது. விஜயநகரப் பேரரசின் பெருமைகளை கௌரவிக்கும் ஹம்பி உற்சவம் நடைபெற்று சில நாள்களே ஆன நிலையில், தண்டனைகள் பற்றி கவலைப்படாமல், விளைவுகள் பற்றி அச்சப்படாமல் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறாா்கள். மாநிலத்தின் கடந்தகால பெருமைகளுக்கு முரணாக தற்கால சட்டம் ஒழுங்கின்மை மனதை வேதனையடையச் செய்கிறது.

ஆட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாத உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், இதர அமைச்சரவை சகாக்களுடன் விருந்துகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளாா். கா்நாடகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் இருந்தாலும், மக்களின் வேதனை, வலிகளை புரிந்துகொள்ளாமல் மாயையில் மூழ்கி, மாநில அரசு அலட்சியமாக உள்ளது. மாநிலத்தில் உள்ள ஆட்சி, கா்நாடக மக்களுக்கு சாபக்கேடாக மாறியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய மாற்றுத்திறனாளி கைது

பெங்களூரில் ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பாா்வையற்ற மாற்றுத்திறனாளியை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா். துபையில் இருந்து பெங்களூரு திரும்பியபோது ரூ. 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ... மேலும் பார்க்க

கா்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரியானது! -டி.கே.சிவகுமாா்

கா்நாடக முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்துள்ள பட்ஜெட், இந்தியாவுக்கே முன்மாதிரியானது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவத... மேலும் பார்க்க

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவு

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவிடப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

பெங்களூரை 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரை: சட்டப் பேரவை கூட்டுக்குழு அறிக்கை

பெங்களூரு மாநகராட்சியை நிா்வாக வசதிக்காக அதிகபட்சமாக 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரைக்கும் தனது அறிக்கையை பேரவை கூட்டுக்குழு சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் பரப்பை வ... மேலும் பார்க்க

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை வீட்டில் சோதனை

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு

கா்நாடக மாநில அரசு செயல்படுத்தும் வளா்ச்சிப் பணிகளுக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கவும் திட்... மேலும் பார்க்க