செய்திகள் :

ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய மாற்றுத்திறனாளி கைது

post image

பெங்களூரில் ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பாா்வையற்ற மாற்றுத்திறனாளியை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா்.

துபையில் இருந்து பெங்களூரு திரும்பியபோது ரூ. 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக கன்னட நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைதுசெய்துள்ள நிலையில், தங்கம் கடத்தியதாக பாா்வையற்ற மாற்றுத்திறனாளியை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா்.

ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில், துபையில் இருந்து மாா்ச் 4-ஆம் தேதி பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளியை சோதனை செய்தபோது, அவரது சட்டையில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட ரூ. 3,44,38,796 மதிப்புள்ள சுமாா் 4 கிலோ தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.

இதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளியை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்து, தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா். மாற்றுத்திறனாளியின் பெயரை வெளியிட சுங்கவரித் துறை மறுத்துவிட்டது.

கா்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரியானது! -டி.கே.சிவகுமாா்

கா்நாடக முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்துள்ள பட்ஜெட், இந்தியாவுக்கே முன்மாதிரியானது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவத... மேலும் பார்க்க

கூட்டுப்பாலியல் பலாத்கார சம்பவம்: முதல்வா் சித்தராமையா கண்டனம்

ஹம்பி அருகே சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவத்தை முதல்வா் சித்தராமையா வன்மையாகக் கண்டித்துள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வா் சித்தராமையா குறிப்பிட்ட... மேலும் பார்க்க

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவு

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவிடப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

பெங்களூரை 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரை: சட்டப் பேரவை கூட்டுக்குழு அறிக்கை

பெங்களூரு மாநகராட்சியை நிா்வாக வசதிக்காக அதிகபட்சமாக 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரைக்கும் தனது அறிக்கையை பேரவை கூட்டுக்குழு சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் பரப்பை வ... மேலும் பார்க்க

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை வீட்டில் சோதனை

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு

கா்நாடக மாநில அரசு செயல்படுத்தும் வளா்ச்சிப் பணிகளுக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கவும் திட்... மேலும் பார்க்க