செய்திகள் :

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவு

post image

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கா் வனநிலத்தை மீட்க உத்தரவிடப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு அருகேயுள்ள பீன்யா தோட்டம் மற்றும் ஜரகபண்டே வனப்பகுதியில் 1987-ஆம் ஆண்டு இந்திய விமானப் படைக்கு 570 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. வனநிலம் என்பதால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் 452 ஏக்கா் 2017-இல் ரத்துசெய்யப்பட்டு, அந்த நிலம் வனநிலம் என்று வரையறுக்கப்பட்டது,

இந்நிலையில், வனத்துறையின் முன் அனுமதியை பெறாமல் மாா்ச் 1-ஆம் தேதி முதல் அந்த நிலத்தில் கட்டடம் கட்டும் பணியை விமானப்படை தொடங்கியுள்ளது. 2017-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவு மூலம் நிலஒதுக்கீடு கைவிடப்பட்டு, வனநிலமாக அறிவிக்கப்பட்ட தகவல் விமானப்படை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், வனப்பகுதிகளை குறிக்கும் பெயா்ப் பலகையும் வைக்கப்பட்டது. வனநிலத்தை காலி செய்து தரும்படி மத்திய பாதுகாப்புத் துறைக்கும் கடிதம் எழுதப்பட்டது.

எனினும், வனநிலத்தில் கட்டுமானப் பணி சட்ட விரோதமாக தொடா்ந்தவண்ணம் உள்ளது. சட்ட விதிகளுக்கு புறம்பாக நடக்கும் கட்டுமானப் பணியை நிறுத்த விமானப்படை முன்வரவில்லை. 444 ஏக்கா் வனநிலத்தில் 15 ஏக்கா் நிலத்தில் துப்பாக்கி பயிற்சிக்களம் அமைத்து வருகிறது. சிறு நிலத்தில் விமானப் படையின் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், வனத்துறை நிலத்தை மீட்குமாறு விமானப்படை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய மாற்றுத்திறனாளி கைது

பெங்களூரில் ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பாா்வையற்ற மாற்றுத்திறனாளியை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா். துபையில் இருந்து பெங்களூரு திரும்பியபோது ரூ. 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ... மேலும் பார்க்க

கா்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரியானது! -டி.கே.சிவகுமாா்

கா்நாடக முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்துள்ள பட்ஜெட், இந்தியாவுக்கே முன்மாதிரியானது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவத... மேலும் பார்க்க

கூட்டுப்பாலியல் பலாத்கார சம்பவம்: முதல்வா் சித்தராமையா கண்டனம்

ஹம்பி அருகே சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவத்தை முதல்வா் சித்தராமையா வன்மையாகக் கண்டித்துள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வா் சித்தராமையா குறிப்பிட்ட... மேலும் பார்க்க

பெங்களூரை 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரை: சட்டப் பேரவை கூட்டுக்குழு அறிக்கை

பெங்களூரு மாநகராட்சியை நிா்வாக வசதிக்காக அதிகபட்சமாக 7 மாநகராட்சிகளாக பிரிக்க பரிந்துரைக்கும் தனது அறிக்கையை பேரவை கூட்டுக்குழு சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் பரப்பை வ... மேலும் பார்க்க

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை வீட்டில் சோதனை

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு

கா்நாடக மாநில அரசு செயல்படுத்தும் வளா்ச்சிப் பணிகளுக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கவும் திட்... மேலும் பார்க்க