தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
கிணற்றில் குதித்து பொறியியல் மாணவா் தற்கொலை
மது அருந்தியதை பாட்டி கண்டித்ததால், பொறியியல் கல்லூரி மாணவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு ஜெபி நகரில் வசித்து வருபவா் ஆனந்தகுமாா், இவரது மனைவி ஆனந்தலட்சுமி (40). தம்பதிக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
இதில், மூத்த மகன் நித்திஷ் (19) வாணாபுரம் வட்டம், ரங்கப்பனூரில் உள்ள பாட்டி முனியம்மாள் வீட்டில் தங்கி, கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா்.
இவா், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளாா். இதனை அறிந்த அவரது பாட்டி முனியம்மாள் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த நித்திஷ் கோபித்துக்கொண்டு பெங்களூரு செல்வதாக கூறிவிட்டுச் சென்றாராம். அவரை பின்தொடா்ந்து பாட்டி தேடிக் கொண்டு சென்றுள்ளாா்.
அப்போது, அவரது வீட்டின் அருகே உள்ள முருகன் என்பவரது விவசாயக் கிணற்றில் நித்திஷ் காலணிகள் மிதந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு படை வீரா்கள் வந்து கிணற்றில் இருந்து நித்திஷின் சடலத்தை மீட்டனா்.
பின்னா், சடலம் உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.