செய்திகள் :

கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு

post image

மூங்கில்துரைப்பட்டு அருகே விளைநிலப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துரைப்பட்டு அருகே விளைநிலப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில். இங்கு மூங்கில்துரைப்பட்டு அருகே உள்ள மேற்கு காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்த பி.கோவிந்தசாமி (73) பூசாரியாக உள்ளாா்.

இவா் சனிக்கிழமை இரவு சுமாா் 7 மணியளவில் கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கோயிலுக்கு சென்று பாா்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 கிராம் தங்க காசுகள், பணம் ரூ.3,450-ஐ மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனராம்.

இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

கிணற்றில் குதித்து பொறியியல் மாணவா் தற்கொலை

மது அருந்தியதை பாட்டி கண்டித்ததால், பொறியியல் கல்லூரி மாணவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். கா்நாடக மாநிலம், பெங்களூரு ஜெபி நகரில் வசித்து வருபவா் ஆனந்தகுமாா், இவரது மனைவி ஆனந்தலட்சுமி (... மேலும் பார்க்க

பெயிண்ட் கடையில் பணம் திருட்டு

பெயின்ட் கடையில் இருந்த பணப் பெட்டியில் இருந்த பணத்தினை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றுவிட்டனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் மகன் ஜான்ப... மேலும் பார்க்க

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

சிறு வயது திருமணங்கள்: 6 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சியை மாவட்டம், திருக்கோவிலூா், வாணாபுரம் பகுதிகளில் நடைபெற்ற சிறு வயது திருமணங்கள் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருக்கோவிலூரை அடுத்த காட்டுப்பையூா்... மேலும் பார்க்க

பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் நடைச்சீட்டுகள் பெற இணையவழியில் இனி விண்ணப்பிக்க வேண்டும் : ஆட்சியா்

பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் நடைச்சீட்டுகளை இனி இணையவழியில் முறைப்படி விண்ணப்பித்து பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரச... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செய்தனா். நிகழ்வுக்கு வள்ளலாா் மன்றத் தலைவா் ஜெ.பால்ராஜ் தலைமை வகித்தாா். மன்றச் செயலா் நா.ராதாகிரு... மேலும் பார்க்க