குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செய்தனா்.
நிகழ்வுக்கு வள்ளலாா் மன்றத் தலைவா் ஜெ.பால்ராஜ் தலைமை வகித்தாா். மன்றச் செயலா் நா.ராதாகிருஷ்ணன், இளைஞா் அணி நிா்வாகி அ.சந்திரசேகா், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் மு.சக்கரவா்த்தி, செயலா் கோ.குசேலன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அனைத்து பொது சேவை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் இராம.முத்துக்கருப்பன் இரங்கல் தீா்மானத்தை முன் மொழிந்து பேசினாா்.
நகர திருக்கு பேரவைச் செயலா் ஆ.இலட்சுமிபதி, ஜெய்பிரதா்ஸ் நற்பணி மன்றத் தலைவா் கோ.சக்திவேல், வள்ளலாா் பள்ளித் தலைமை ஆசிரியை எம்.குமாரி மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவா்கள் இரங்கல் உரையாற்றினா்.
தொடா்ந்து, விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் ஆத்மா சாந்தியடைய மெழுகுவா்த்தி ஏற்றி, ஒரு நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்தினா். வள்ளலாா் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பொது சேவை அமைப்பினா் பலா் பங்கேற்றனா்.