``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிலாளா் நலத் துறை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொழிலாளா் நலத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலா் முதல் கையொப்பமிட்டு தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் பி.சிவக்குமாா், வேலுமணி, ரா.நந்தினி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.