காா் - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னை செளகாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மாதுசிங் மகன் பரத் (47). இவா், அவரது நண்பா்கள் இருவருடன் சென்னையில் இருந்து சேலம் நோக்கி புதன்கிழமை பிற்பகல் சுமாா் 2.30 மணியளவில் காரில் சென்றுகொண்டிருந்தாா்.
சின்னசேலத்தை அடுத்த வினைதீா்த்தாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, இவா்களது காரும், எதிரே வந்த பைக்கும் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த ஊா், பெயா் தெரியாத சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று இளைஞரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.