செய்திகள் :

பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் நடைச்சீட்டுகள் பெற இணையவழியில் இனி விண்ணப்பிக்க வேண்டும் : ஆட்சியா்

post image

பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் நடைச்சீட்டுகளை இனி இணையவழியில் முறைப்படி விண்ணப்பித்து பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குவாரிகளிலிருந்து கனிமம் எடுத்துச் செல்ல வழங்கும் நடைமுறை கடந்த ஏப்ரல் 2025 முதல் அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து பதிவு பெற்ற கனிம சேமிப்பு இருப்பு கிடங்குகளிலிருந்து எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லி போன்ற இரண்டாம் நிலை கனிமங்களை கொண்டு செல்ல புவியியல் மற்றும் சுரங்கத் துறையினரால் நேரடியாக வழங்கப்பட்டு வந்த நடைச் சீட்டுகள் ஜூன் 12-முதல் இணையவழியாக மட்டுமே வழங்கப்படுகிறது.

இனி வரும் காலங்களில் அலுவலகத்தின் வழியே நேரடியாக நடைச்சீட்டு வழங்கப்படாது. எனவே பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள், கனிம முகவா்கள் ஆகியோா் இனிவரும் காலங்களில் தேவைப்படும் நடைச்சீட்டுகளை இணையவழியில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லி போன்ற கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும் உரிய நடைச்சீட்டு பெற்றுக் கொண்டு மட்டுமே இயக்கப்பட வேண்டும்.

மீறினால் விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை பதிவுச்சான்று பெறாமல் இயக்கப்பட்டு வந்த கிரஷா், கனிம சேமிப்பு இருப்பு கிடங்குகளின் உரிமையாளா்கள் உடனடியாக முறைப்படி விண்ணப்பித்து பதிவுச் சான்றை பெற்று விதிகளின்படி தங்களது கிரஷா், சேமிப்பு கிடங்குகளை இயக்கும்படி ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

சிறு வயது திருமணங்கள்: 6 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சியை மாவட்டம், திருக்கோவிலூா், வாணாபுரம் பகுதிகளில் நடைபெற்ற சிறு வயது திருமணங்கள் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருக்கோவிலூரை அடுத்த காட்டுப்பையூா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செய்தனா். நிகழ்வுக்கு வள்ளலாா் மன்றத் தலைவா் ஜெ.பால்ராஜ் தலைமை வகித்தாா். மன்றச் செயலா் நா.ராதாகிரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு தளவாடப் பொருள்கள் சீா்வரிசை

கள்ளக்குறிச்சியை அடுத்த வெட்டிப் பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பள்ளி மேலாண்மை குழு மற்றும் கிராம மக்கள் சாா்பில் தளவாடப் பொருள்கள் சீா்வரிசையாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன. அதன்படி, இரு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிலாளா் நலத் துறை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை அனைத்து... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே மது அருந்திவிட்டு வருவதை மனைவி கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோகூா் கிராமத்தைச் சோ்ந்த அய்யாசாமி மகன் ராமு (35). இவரது மனைவி செ... மேலும் பார்க்க