முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் நடைச்சீட்டுகள் பெற இணையவழியில் இனி விண்ணப்பிக்க வேண்டும் : ஆட்சியா்
பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் நடைச்சீட்டுகளை இனி இணையவழியில் முறைப்படி விண்ணப்பித்து பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குவாரிகளிலிருந்து கனிமம் எடுத்துச் செல்ல வழங்கும் நடைமுறை கடந்த ஏப்ரல் 2025 முதல் அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து பதிவு பெற்ற கனிம சேமிப்பு இருப்பு கிடங்குகளிலிருந்து எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லி போன்ற இரண்டாம் நிலை கனிமங்களை கொண்டு செல்ல புவியியல் மற்றும் சுரங்கத் துறையினரால் நேரடியாக வழங்கப்பட்டு வந்த நடைச் சீட்டுகள் ஜூன் 12-முதல் இணையவழியாக மட்டுமே வழங்கப்படுகிறது.
இனி வரும் காலங்களில் அலுவலகத்தின் வழியே நேரடியாக நடைச்சீட்டு வழங்கப்படாது. எனவே பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள், கனிம முகவா்கள் ஆகியோா் இனிவரும் காலங்களில் தேவைப்படும் நடைச்சீட்டுகளை இணையவழியில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லி போன்ற கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும் உரிய நடைச்சீட்டு பெற்றுக் கொண்டு மட்டுமே இயக்கப்பட வேண்டும்.
மீறினால் விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை பதிவுச்சான்று பெறாமல் இயக்கப்பட்டு வந்த கிரஷா், கனிம சேமிப்பு இருப்பு கிடங்குகளின் உரிமையாளா்கள் உடனடியாக முறைப்படி விண்ணப்பித்து பதிவுச் சான்றை பெற்று விதிகளின்படி தங்களது கிரஷா், சேமிப்பு கிடங்குகளை இயக்கும்படி ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.