இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே மது அருந்திவிட்டு வருவதை மனைவி கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மோகூா் கிராமத்தைச் சோ்ந்த அய்யாசாமி மகன் ராமு (35). இவரது மனைவி செவ்வந்தி (32). தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனா்.
வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்த ராமு, மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதை அவரது மனைவி கண்டித்ததால் அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்படுமாம்.
இதேபோல, ராமு புதன்கிழமையும் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததை செவ்வந்தி கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த ராமு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.