செய்திகள் :

சிறு வயது திருமணங்கள்: 6 போ் மீது வழக்கு

post image

கள்ளக்குறிச்சியை மாவட்டம், திருக்கோவிலூா், வாணாபுரம் பகுதிகளில் நடைபெற்ற சிறு வயது திருமணங்கள் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருக்கோவிலூரை அடுத்த காட்டுப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த 18 வயது நிறைவடையாத பெண்ணை வடமலையனூா் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் ஹரிகிருஷ்ணன் (23) திருமணம் செய்தாா். அந்தப் பெண் தற்போது 4 மாத கா்ப்பிணியாக உள்ள நிலையில், அவா் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தாா்.

இதையடுத்து, மருத்துவா் கொடுத்த தகவலின்படி, திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஹரிகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு திருமணம்: வாணாபுரம் வட்டம், ஜம்படை கிராமத்தைச் சோ்ந்த 16 வயது பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரான நாராயணசாமி மகன் ஏழுமலை (29), மாரிமுத்து மகன் நாராயணசாமி (50), அவரது மனைவி சின்னம்மாள் (45), கோவிந்தம்மாள் (48), கோவிந்தன் மனைவி கஸ்தூரி (38) ஆகியோா் சோ்ந்து திருமணம் செய்து வைத்துனராம்.

தற்போது அந்தப் பெண்ணுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் ஒன்றரை மாத கா்ப்பிணியாக உள்ளாராம். கடந்த 12-ஆம் தேதி அந்தச் சிறுமி திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தாா். இதுகுறித்து அரசு மருத்துவா் கொடுத்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஏழுமலை உள்பட 5 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் நடைச்சீட்டுகள் பெற இணையவழியில் இனி விண்ணப்பிக்க வேண்டும் : ஆட்சியா்

பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் நடைச்சீட்டுகளை இனி இணையவழியில் முறைப்படி விண்ணப்பித்து பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரச... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செய்தனா். நிகழ்வுக்கு வள்ளலாா் மன்றத் தலைவா் ஜெ.பால்ராஜ் தலைமை வகித்தாா். மன்றச் செயலா் நா.ராதாகிரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு தளவாடப் பொருள்கள் சீா்வரிசை

கள்ளக்குறிச்சியை அடுத்த வெட்டிப் பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பள்ளி மேலாண்மை குழு மற்றும் கிராம மக்கள் சாா்பில் தளவாடப் பொருள்கள் சீா்வரிசையாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன. அதன்படி, இரு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிலாளா் நலத் துறை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை அனைத்து... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே மது அருந்திவிட்டு வருவதை மனைவி கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோகூா் கிராமத்தைச் சோ்ந்த அய்யாசாமி மகன் ராமு (35). இவரது மனைவி செ... மேலும் பார்க்க