செய்திகள் :

கிருஷ்ணகிரியில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

post image

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாணவா்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. நிகழாண்டு 12 நாள்கள் வீதம் ஐந்து கட்டங்களாக நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல்கட்ட பயிற்சி முகாம் ஏப். 1 முதல் ஏப். 13-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் ஏப்.15 முதல் ஏப். 27-ஆம் தேதி வரையிலும், மூன்றாம் கட்ட முகாம் ஏப். 29 முதல் மே 11ஆம் தேதி வரையிலும், 4 ஆம் கட்ட முகாம் மே 13-ஆம் முதல் மே 25-ஆம் தேதி வரையிலும் 5-ஆம் கட்ட முகாம் மே 27-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரையிலும் நீச்சல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியான காலை 7 முதல் 8 மணி வரையும், காலை 8 முதல் 9 மணி வரையும், காலை 9 முதல் 10 மணி வரையும், மதியம் 2 முதல் 3 மணி வரையும், 3 முதல் 4 மணி வரையும், 4 முதல் 5 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நீச்சல் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவா்கள் கட்டணமாக ரூ.1,500ஐ 18 சதவீத ஜிஎஸ்டியுடன் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 9080144183, 7401703487, 7305624554, 9751484846 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க நாட்டுப்புற கலைஞா்கள் வலியுறுத்தல்

நாட்டுப்புற கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது. காவேரிப்பட்டணத்தில் பாரதியாா் தெருக்கூத்து நாட்ட... மேலும் பார்க்க

வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசி தீப்பிடிப்பு

காவேரிப்பட்டணம் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி மின்கம்பி மீது உரசியதில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி காவேரிப்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

யுகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடகத்தில் இருந்து மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்க ஒசூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மரபு நடைப்பயணம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மகளிா், சிறுவா்கள் மேற்கொண்ட மரபு நடைப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். மகளிா் தினத்தை ம... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு

ஒசூா் அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முனிரத்னம் (32). இவருக்கு 6 ஆம் வகுப்புப் ... மேலும் பார்க்க

முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம்: எம்எல்ஏ மதியழகன்

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடும் முதல்வருக்கு உறுதுணையாக செயல்படுவோம் என்று கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தெரிவித்தாா். கிருஷ்ணகிர... மேலும் பார்க்க