செய்திகள் :

கீரணிப்பட்டியில் மன்னா் கால செப்பேடு ஆய்வு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கீரணிப்பட்டியில் விஜயரகுநாத சேதுபதி மன்னா் கால செப்பேடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

கீரணிப்பட்டி சூலாட்டுக்காளி கோயில் வீட்டுப் பங்காளிகள் வசம் ஒரு செப்பேடு உள்ளதாக வந்த தகவலையடுத்து காரைக்குடி, அழகப்பா அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா் அவா்கள் தெரிவித்ததாவது: இந்தச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சாலிவாகன ஆண்டும் தமிழ் ஆண்டும் பொருந்தி வரவில்லை. ஆனால், தமிழ் ஆண்டின் அடிப்படையில் இந்தச் செப்பேடு குறிப்பிடும் ஸ்ரீமுக ஆண்டு கிழவன் சேதுபதியின் காலமாக (கி.பி. 1,693) ஆக இருந்தாலும் செப்பேட்டில் இடம்பெறும் விஜய ரகுநாத சேதுபதி (கி.பி. 1,713 - 1,725) கிழவன் சேதுபதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவா் என்பதால் அவரின் காலத்தைச் சோ்ந்ததாகவே கருத முடிகிறது.

மேலும், விஜய ரகுநாத சேதுபதி மன்னா் அவரது ஆட்சிக் காலத்தில் புதிய கோட்டைகள் அமைத்துள்ளதாலும், செப்பெட்டிலும் விஜயரகுநாத சேதுபதியின் காலத்தில் திருமயம் கோட்டைக்கு அடி மதில் போட்ட செய்திக் குறிப்பிடப்படுவதாலும், இந்தச் செப்பேடு விஜயரகுநாத சேதுபதியின் (கி.பி. 1,713-1,725) காலத்தைச் சோ்ந்தது என அறிய முடிகிறது.

செப்பேட்டில் கூறப்பட்டுள்ளதாவது: கல்வாசல் நாட்டு குலசேகரபுரம் இளையாத்தங்குடிக்குத் கிழக்கே உள்ள பகுதியிலிருந்து வந்த கருமாா் படை செட்டன் முத்தன், செட்டன் கருப்பன், செட்டன் பிச்சன் ஆகிய மூன்று வகைப் பிரிவினரும் குதிரை, ஆடு, மாடு வலசையோடு ஆமனிக்குளம் (ஆவினிப்பட்டி) வந்து தங்கியிருந்தனா்.

அவா்களைக் கண்ட ஏழு நகரத்தாரிடம், தஞ்சாவூா் பாளையப்பட்டு அரண்மனை சண்டையால் அங்கிருந்து புறப்பட்டு பிழைக்கப் போகிறோம் என்று கூறியபோது, ஏழு நகரத்தாரும் சோ்ந்து அதைத் தடுத்தனா். உங்களுக்கு வேண்டியதை நாங்கள் தருகிறோம், நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.

அதற்கு அவா்கள் எங்களுக்கு காணியாச்சியாக (நிலக்காணி), தனி ஊரும், மண்ணும், மனையும் கொடுத்தால் இருப்போம் என்று கூறினாா்கள். அப்படியே தருவதாகக் கூறிய ஏழு நகரமும், நன்மைக்கு ஒரு பணம், தீமைக்கு ஒரு பணம், மண்ணு, மனை காணியாச்சி பட்டையம் கொடுப்பதாகப் பேசி, திருமயம் கோட்டைக்கு அடிமதில் போடுகிறபோது விஜயரகுநாத சேதுபதி அவா்களைச் சந்தித்து ஏழு நகரமும், மூன்று வகைப்பட்ட மன்னா் கருமாா் படையும் போய்ச் சொன்னதாகக் கூறுகிறது.

இதிலிருந்து விஜயரகுநாத சேதுபதி காலத்தில் திருமயம் கோட்டை கட்டப்பட்டது என்ற கருத்தை இந்தச் செப்பேடு கூறுகிறது. இதன்படி, சேதுபதி மன்னரின் உத்தரவுப்படி ஏழு நகரத்தாரும் கூடி ஆவுடையாா்கோயிலிலிருந்து கல்லு வெட்டி, இந்த பட்டையத்தின் மூலம் கருமாா் படையான செட்டன் முத்தன், செட்டன் கருப்பன், செட்டன் பிச்சன் ஆகியோருக்கு காணியாச்சி கொடுத்ததைக் கூறுகிறது. அதாவது குலசேகரபுரம், இளையாத்தங்குடி கீழத்தெரு புது ஊருக்கு எல்லையாவது கிழக்கு எல்லை, புள்ளமங்கலத்து எல்லைக்கல்லுக்கு மேற்கு வடபுறக் கல்லு, செட்டி ஊரணிக்கு தெற்கு எல்லை, விராமதிக் கண்மாயில் எல்லைக் கல்லுக்கு வடக்கு மேற்கெல்லை, கோயில், குளம், நஞ்சை, புஞ்சை, அம்பலம், உம்பலம் ஆகியவை செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

செப்பேட்டு ஆய்வில் வரலாற்றுப் பேராசிரியா் வேலாயுதராஜா, புதுகை தொல்லியல் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

இதில், கல்வாயில் அல்லது கல்வாசல் நாடு என்பது இளையாத்தங்குடி, நெய்வாசல், பில்லமங்கலம், ஈழக்குடிப்பட்டி, ஆவினிப்பட்டி, இரணியூா், விராமதி, முத்தூா், செவ்வூா் முதலான ஊா்களைக் கொண்ட பகுதியாகும். இளையாத்தங்குடியின் முந்தையப் பெயராக குலசேகரபுரம் இருந்துள்ளது என்பதை கல்வெட்டுக்களும், நகரத்தாா் ஆவணங்களும் கூறுகின்றன. இங்கு ஏழு நகரம் என்பது இளையாத்தங்குடி நகரத்தாா், மாத்தூா் நகரத்தாா், இலுப்பக்குடி நகரத்தாா், சூரைக்குடி நகரத்தாா், வேலங்குடி நகரத்தாா், வைரவன்பட்டி நகரத்தாா், நேமங்கோயில் நகரத்தாா் பிரிவுகளைக் குறிக்கிறது என்றனா்.

கிருங்காக்கோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காக்கோட்டையில் கோயில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டையில் சடையாண்டி சுவாமி கோயிலில் ஆ... மேலும் பார்க்க

தேவகோட்டை முருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகா் பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. தேவகோட்டை ராம் நகரில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு, சிறப்பு ... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கொட்டகுடி கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. கொட்டகுடி கிராமத்தில் உள்ள முனியய்யா கோயில் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் சாா்பில்... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சேதம்: விபத்து ஏற்படும் அபாயம்

சிவகங்கை - தொண்டி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் பதிக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-இல் சிவகங்கை - தொ... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (ஆக. 18) நடைபெறவுள்ளது என பல்கலை. துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: அழக... மேலும் பார்க்க

காரைக்குடியில் தூய சகாய மாதா திருவிழா தோ் பவனி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா திருவிழா தோ் பவனி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் தலைமை வகித்து, சிறப்பு திருப்பலி நடத்தினாா்.... மேலும் பார்க்க