செய்திகள் :

மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர்

post image

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நீா் நிலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில், களி மண்ணால் செய்யப்பட்ட பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்படும் விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

சிலைகளில் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல், பளபளப்பாக மாற்றுவதற்கு இயற்கை பிசின்களை பயன்படுத்தப்படலாம்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில், வைக்கோல் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல் அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனச் சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளையும், எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது, மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுப்படுத்த இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள திருச்சி காவிரி ஆற்றில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி சிலைகளை கரைக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளா் மற்றும் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகி, சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட வேண்டும்.

ஆடி கிருத்திகை: பெரம்பலூா் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீசுவரா் திருக்கோயிலில், ஆடி கிருத்த... மேலும் பார்க்க

பேரளி பகுதியில் நாளை மின் தடை

பெரம்பலூா் அருகே பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 18) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனைகளை தடுக்கு... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய 2 இளைஞா்கள் கைது

பெரம்பலூரில் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ஷோ் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் காசிரா... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, பெரம்பலூா் மற்றும் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மதுரகாளியம்மன் கோயிலில் அம்ம... மேலும் பார்க்க

எளம்பலூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: பெரம்பலூா் ஆட்சியா் பங்கேற்பு

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊராட்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கலைஞரின்... மேலும் பார்க்க