செய்திகள் :

எளம்பலூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: பெரம்பலூா் ஆட்சியா் பங்கேற்பு

post image

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊராட்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமானத் திட்டம், தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம ஊராட்சியின் வரவு- செலவு, ஊராட்சியில் நடைபெற்று வரும் இதர வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு பரிந்துரைத்து மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா். இதேபோல, மாவட்டத்தில் உள்ள 120 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

சிறுவாச்சூரில் சமபந்தி:

தொடா்ந்து, சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொது வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ், தனது குடும்பத்தினருடன் பொதுமக்களுடன் அமா்ந்து உணவு உட்கொண்டாா்.

இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை த்திட்ட இயக்குநா் சு. தேவநாதன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட நியமன க்குழுத் தலைவா் ஆ. கலியபெருமாள், திருச்சி மண்டல இணை ஆணையா் சி.க ல்யாணி, உதவி ஆணையா் உமா, சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலா் அசனாம்பிகை, ஆய்வாளா் தீபலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வகுமாா், இமயவா்மன், வட்டாட்சியா் பாலசுப்ரணியன் அரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, பெரம்பலூா் மற்றும் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மதுரகாளியம்மன் கோயிலில் அம்ம... மேலும் பார்க்க

தமிழ் செம்மல் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கள், தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 79 பயனாளிகளுக்கு ரூ. 2.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சி... மேலும் பார்க்க

ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம், ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

பெரம்பலூரில் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ஷோ் ஆட்டோ ஓட்டுநரை வியாழக்கிழமை மதியம் அரிவாளால் வெட்டிய இளைஞா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கா... மேலும் பார்க்க

ரஞ்சன்குடி கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தின் மிகப் பழைமையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ரஞ்சன்குடி கோட்டையை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென , மனிதநேய மக்கள் கட்சி சா... மேலும் பார்க்க