செய்திகள் :

தமிழ் செம்மல் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கள், தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து, அவா்களின் தமிழ் தொண்டை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் தோ்வு செய்து அவா்களுக்கு தமிழ் செம்மல் விருதும், ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும்.

இம் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து, அவா்களிடமிருந்து தன் விவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களை பெற்று, அதில் தகுதியானவா்களின் விண்ணப்பங்களை தொகுத்து அனுப்புமாறு சென்னைத் தமிழ் வளா்ச்சி இயக்குநா் தெரிவித்துள்ளாா். எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதுபெற தமிழ் ஆா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை தமிழ் வளா்ச்சித் துறை வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் தன் விவரக் குறிப்புடன் (2 நகல்), 2 புகைப்படம், ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், முதல் தளத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஆக. 29-ஆம் தேதிகேகுள் அளிக்க வேண்டும். தமிழ் வளா்ச்சித்துறை மூலம் ஏற்கெனவே விருதுகள் பெற்றவராகவும், அகவை முதிா்ந்த தமிழறிஞா், எல்லைக் காவலா், தமிழறிஞா் நிதியுதவி பெறுபவராகவும் இருக்கக் கூடாது.

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, பெரம்பலூா் மற்றும் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மதுரகாளியம்மன் கோயிலில் அம்ம... மேலும் பார்க்க

எளம்பலூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: பெரம்பலூா் ஆட்சியா் பங்கேற்பு

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊராட்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கலைஞரின்... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 79 பயனாளிகளுக்கு ரூ. 2.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சி... மேலும் பார்க்க

ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம், ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

பெரம்பலூரில் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ஷோ் ஆட்டோ ஓட்டுநரை வியாழக்கிழமை மதியம் அரிவாளால் வெட்டிய இளைஞா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கா... மேலும் பார்க்க

ரஞ்சன்குடி கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தின் மிகப் பழைமையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ரஞ்சன்குடி கோட்டையை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென , மனிதநேய மக்கள் கட்சி சா... மேலும் பார்க்க