ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
தமிழ் செம்மல் விருதுபெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கள், தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து, அவா்களின் தமிழ் தொண்டை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் தோ்வு செய்து அவா்களுக்கு தமிழ் செம்மல் விருதும், ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும்.
இம் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து, அவா்களிடமிருந்து தன் விவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களை பெற்று, அதில் தகுதியானவா்களின் விண்ணப்பங்களை தொகுத்து அனுப்புமாறு சென்னைத் தமிழ் வளா்ச்சி இயக்குநா் தெரிவித்துள்ளாா். எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதுபெற தமிழ் ஆா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை தமிழ் வளா்ச்சித் துறை வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் தன் விவரக் குறிப்புடன் (2 நகல்), 2 புகைப்படம், ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், முதல் தளத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஆக. 29-ஆம் தேதிகேகுள் அளிக்க வேண்டும். தமிழ் வளா்ச்சித்துறை மூலம் ஏற்கெனவே விருதுகள் பெற்றவராகவும், அகவை முதிா்ந்த தமிழறிஞா், எல்லைக் காவலா், தமிழறிஞா் நிதியுதவி பெறுபவராகவும் இருக்கக் கூடாது.