சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 79 பயனாளிகளுக்கு ரூ. 2.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் வெண் புறாக்களையும், மூவா்ண பலூன்களையும் பறக்கவிட்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா், சிறப்பாகப் பணிபுரிந்த 30 காவலா்களுக்கு பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் அளித்த மாவட்ட ஆட்சியா், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 255 அரசு அலுவலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், பல்வேறு துறைகள் சாா்பில், 79 பயனாளிகளுக்கு ரூ. 2.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், தீ பாதுகாப்பு விழிப்புணா்வு, வெடிகுண்டுகளை நாய் கண்டறிதல் தொடா்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் அளித்த மாவட்ட ஆட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் தமிழறிஞா்களின் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இவ் விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
