செய்திகள் :

ஹிந்துபோல நடித்து 12 பெண்களிடம் மோசடி!

post image

உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு 12 பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் ஷராஃப் ரிஸ்வி என்பவர், தன்னை ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு, தன்னை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பெண்ணின் புகாரையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி ரிஸ்வியை கைது செய்தனர். விசாரணையில், ரிஸ்வி 12 பெண்களை ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.

சமூக ஊடகங்களில் சாம்ராட் சிங், விஜய்குமார், அஜய்குமார் என்று வெவ்வேறு போலியான பெயர்கள் மூலம் உலவிவந்த ரிஸ்வி, திருமண உதவிமைய செயலிகளில் பெண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

குறிவைக்கும் சில பெண்களிடம் நட்பினை வளர்த்து, அவர்களிடம் தன்னை ஒரு தொழிலதிபர்போல அடையாளப்படுத்திக் கொள்கிறார். அவர்களுக்கிடையேயான உறவில் வலுவடைந்ததும், வாடகைக் கார், விலையுயர்ந்த ஆடைகள் என்று தன்னை பணக்காரர்போல காட்டிக்கொண்டு பெண்ணின் வீட்டுக்கு நிச்சயம் மேற்கொள்ள செல்வாராம். மேலும், இவரின் வீட்டினருடன் பெண் வீட்டார் விடியோ காலில் பேச வேண்டுமென்றால், தனது நண்பர்களை குடும்பத்தினர் என்றும் அறிமுகப்படுத்தி ஏமாற்றியுள்ளார்.

இவ்வாறாக பல பெண்களைக் குறிவைத்து, அவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களிடம் நட்பு வளர்த்து, பின்னர் திருமணம்வரையில் உறவினை வளர்த்துள்ளார். மேலும், அவர்களை தனது ஆசைக்கு இணங்கவும் வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெண்களிடம் ரூ. 5 லட்சம் பணமும் பறித்துள்ளார். அதுமட்டுமின்றி, திருமணத்துக்கு முன்னதாக அவர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.

இந்த நிலையில்தான், ரிஸ்வியின் மோசடியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரிஸ்வியின் கட்டாய மதமாற்றம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் காவலர் அதிகாரி தற்கொலை

சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை காவல் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் டல்லிராஜ்ஹாரா காவல் நிலையத்தில் உதவி துணை ஆய்வாளராக ... மேலும் பார்க்க

சோரி சோரி, சுப்கே சுப்கே... வாக்குத் திருட்டு குறித்து புதிய விடியோ பகிர்ந்த ராகுல்

மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.லாபடா ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் மக்கள் பாா்வைக்கு!!

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த பூந்தோட்டம் இன்று (ஆக.16) முதல் மக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி வியாழக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பாா்... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! நிலச்சரிவில் 2 பேர் பலி

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை மீது விழுந்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானதையடுத்து, நாகாலாந்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இந்த 7 நாள் துக்க அனுசரிப்பின்போது, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி! டிரம்ப் சூசகம்!

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக பதிலளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வெள்ளிக்கிழமையில் பேச்சு... மேலும் பார்க்க