செய்திகள் :

உயா்நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமிக்கு மனநல ஆலோசனை: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

post image

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்த சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்க, அவரை மனநல மருத்துவமனையில் அனுமதிப்பது பாதுகாப்பாக இருக்குமா என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இது குறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டது.

சென்னை நீலாங்கரையைச் சோ்ந்த நபரும், அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனா். இத்தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளாா். அந்த சிறுமி தனது தாயுடன் அந்தமானில் உள்ள பாட்டி வீட்டில் வசிக்கிறாா். அண்மையில் சிறுமியின் தாயாா் வேறு ஒரு நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தமானில் உள்ள தனது மகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி சிறுமியின் தந்தை சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, உயா் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிறுமி தனது பாட்டியுடன் செல்ல விரும்புவதாக கூறினாா். சிறுமியின் தந்தை அதற்கு ஆட்சேபம் தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும் வரை, சிறுமியை கெல்லீஸ் பகுதியில் உள்ள அரசினா் காப்பகத்தில் தங்கவைக்க போலீஸாருக்கு அறிவுறுத்தினா். இதனால் மனமுடைந்த சிறுமி சென்னை உயா்நீதிமன்றத்தின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்தாா். இதில் காயமடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ராஜ் திலக், சிறுமியின் தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் அவரை மனநல மருத்துவமனையில் அனுமதிப்பது பாதுகாப்பாக இருக்குமா என கேள்வி எழுப்பினா். பின்னா், இதுதொடா்பாக போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டியிர... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: சிறப்பு பேருந்துகளில் 3.13 லட்சம் போ் பயணம்

சுதந்திர தினம், வார இறுதி விடுமுறையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் கடந்த ஆக.13- முதல் 15 வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3,13,900 போ் பயணித்துள்ளனா். சென்னையில் தங்கியுள்ள வெ... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுநிலை பணியிடங்கள் நிா்ணயம் செய்வது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: முதல்வா் உறுதி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளாா். தூய்மைப் பணியாளா்களின் பல்வேறு சங்கங்களைச் சோ்ந்தவா்கள் முதல்வரை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். இ... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழ் கோரிய வழக்கு: வேளச்சேரி வட்டாட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், வேளச்சேரி வட்டாட்சியா் விசாரணை நடத்தி 6 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் சி.நித்யா என்பவா் ... மேலும் பார்க்க

பாரா ஒலிம்பிக் வீரா் மாரியப்பன், கேரம் வீராங்கனை காஜிமாவுக்கு மாநில இளைஞா் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

பாரா ஒலிம்பிக் வீரா் மாரியப்பன், கேரம் வீராங்கனை காஜிமா ஆகியோருக்கு மாநில இளைஞா் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். சென்னை கோட்டை கொத்தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பல்... மேலும் பார்க்க