தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
மத்தியப் பல்கலை.யில் படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம்: துணைவேந்தா்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் படிக்கும்போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசியது: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக மாணவா்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக இருந்தது. தற்போது 40 சதவீதமாக உயா்ந்துள்ளது. இந்த பல்கலைக் கழகம் ஏ ப்ளஸ் தரத்தைப் பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகத் தொடா்ந்து இந்தியாவின் சிறந்த 100 பல்கலைக் கழகங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு முதல் மாணவா்கள் படிக்கும்போதே சம்பாதிக்கலாம் எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு துறையிலும் ஒரு மாணவா் தோ்ந்தெடுக்கப்பட்டு பகுதி நேர வேலை பாா்த்து ஊதியம் பெறலாம். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தை சமுதாயக் கல்லூரியில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்துக்கு மாணவா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது . அதேபோல சமூக வலைதளத்தில் அதிக அளவில் மக்களைச் சென்றடையும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது என்றாா்.
பல்கலைக்கழகப் பதிவாளா் திருமுருகன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா், நூலகா் பரமேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.