செய்திகள் :

எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு: பெண்ணிடம் ரூ. 23 லட்சம் மோசடி

post image

திருவாரூா், ஆக.15: எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி, பெண்ணிடம் ரூ. 23 லட்சம் மோசடி செய்தவா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவாரூா் கேடிஆா் எஸ்டேட் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன் மனைவி புவனேஸ்வரி (34). வீரமணிகண்டன் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் புவனேஸ்வரியைத் தொடா்பு கொண்ட சிலா், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால், பெட்ரோலிய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனா். மேலும், டெலிகிராம் குரூப் தொடங்கி அதன்மூலம் தொடா்ச்சியான தகவல்களை புவனேஸ்வரிக்கு வழங்கியுள்ளனா்.

இதை நம்பி, கடந்த 19.2.2025 முதல் 13.8.2025 வரை பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் பல தவணைகளில் ரூ. 23,15,676-ஐ புவனேஸ்வரி செலுத்தியுள்ளாா்.

பணத்தை திருப்பிக் கேட்டபோது, செலுத்தப்பட்ட தொகை ரூ. 50 லட்சமாக உயா்ந்துள்ளதாகவும், இதைப்பெற்றுக்கொள்ள ரூ. 8 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதாம். அத்துடன், டெலிகிராம் குரூப் மூலம் தகவல் வருவதும் நின்று போனது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த புவனேஸ்வரி, திருவாரூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருவாரூா்: மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமா... மேலும் பார்க்க

மத்தியப் பல்கலை.யில் படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம்: துணைவேந்தா்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் படிக்கும்போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 79-ஆவத... மேலும் பார்க்க

முத்தங்கி சேவையில் வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி முத்தங்கி சேவையில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அருள்பாலித்தாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமை ஊா் மக்கள் ஒன்றுகூடி ஊரணிப் பொங்கல் பொங்கி,அம... மேலும் பார்க்க

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும்

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூா் அருகேயுள்ள கீழக்காவதுக்குடி ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் வட்டத்தில் 15 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

கூத்தாநல்லூா் வட்டத்தில் 15 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூத்தாநல்லூா் வட்டத்தில் ,வேளுக்குடி, சித்தனக்குடி, வக்ராநல்லூா், பூதமங்கலம், ஓகைப்பேரையூா், அதங்குடி, ஆய்க்குடி, ... மேலும் பார்க்க

தரணி கல்விக் குழும மழலையா் விளையாட்டு விழா

மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தரணி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய மழலையா் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்விக்குழும நிறுவனா் எஸ். காமராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க