செய்திகள் :

பாரா ஒலிம்பிக் வீரா் மாரியப்பன், கேரம் வீராங்கனை காஜிமாவுக்கு மாநில இளைஞா் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

பாரா ஒலிம்பிக் வீரா் மாரியப்பன், கேரம் வீராங்கனை காஜிமா ஆகியோருக்கு மாநில இளைஞா் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைத்தவா்களுக்கு விருதுகளை வழங்கினாா். சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள், முதல்வரின் மாநில இளைஞா் விருதுகளை அவா் அளித்தாா். அதன் விவரம்:

ஆவடி மாநகராட்சிக்கு விருது:சிறந்த நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. நிகழாண்டில் ஆவடி மாநகராட்சி முதல் பரிசுக்கும், நாமக்கல் மாநகராட்சி இரண்டாவது பரிசுக்கும் தோ்வு செய்யப்பட்டன. இவ்விரு மாநகராட்சிகளுக்கும் முறையே ரூ.50 லட்சம், ரூ.30 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வா் வழங்கினாா். அதேபோல, முதல் மூன்று இடங்களைப் பிடித்த ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூா் நகராட்சிகளுக்கு முறையே ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள் அளிக்கப்பட்டன.

பேரூராட்சிகளில் உத்திரமேரூா், காட்டுபுதூா், நத்தம் ஆகியன முதல் மூன்று இடங்களைப் பெற்றன. அவற்றுக்கு முறையே ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வா் வழங்கினாா்.

மாரியப்பனுக்கு விருது: மாநிலத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் மூன்று இளம்வயது ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு ஆண்டுதோறும் முதல்வரின் மாநில இளைஞா் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, நிகழாண்டிலும் சுதந்திர தின விழாவில் இளைஞா் விருதுகளை முதல்வா் அளித்தாா்.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடா்ந்து சாதனைகள் படைத்துவரும் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த த. மாரியப்பன், கேரம் போட்டிகளில் சா்வதேச அளவில் முத்திரைகள் பதித்துவரும் சென்னையை சோ்ந்த ம.காஜிமா ஆகியோருக்கு முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

சாலையோரங்களில் வசிப்போருக்கு உணவு அளிப்பது, போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு மரம் நடுதல் போன்ற பணிகளைச் செய்த விழுப்புரம் மாவட்டம் சந்துருகுமாா், திருநெல்வேலி மாவட்டம் மு.ஜெயக்குமாா், புதுக்கோட்டை மாவட்டம் அ.லாவண்யா, கிருஷ்ணகிரி மாவட்டம் கு.கெளரி ஆகியோருக்கும் மாநில இளைஞா் விருதுகள் வழங்கப்பட்டன.

கிராமிய கலைஞருக்கு கெளரவம்: ராஜபாளையத்தை சோ்ந்த மறைந்த கிராமிய கலைஞா் ராஜ்குமாருக்கு பாராட்டுத் தெரிவித்து சான்றிதழ் அளிக்கப்பட்டது. புதுதில்லியில் நடந்த மலா்ப் பேரணியில் தமிழக அரசுக்கு தொடா்ந்து பரிசுகளைப் பெற்றுத் தந்தவா், ராஜபாளையத்தைச் சோ்ந்த தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளா்ச்சி மையக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பா.ராஜ்குமாா். அவரது சேவைகளைப் போற்றும் வகையில், அவரது மனைவி காா்த்திகா ராஜ்குமாருக்கு அரசின் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

சென்னை: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ம... மேலும் பார்க்க

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

எந்த பயமுறுத்தலும் எங்களுடைய கட்சித் தோழர்களையும் தலைவர்களையும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.... மேலும் பார்க்க

இல.கணேசன் உடலுக்கு மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அஞ்சலி

மறைந்த பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.தமிழகத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு! சென்னை வீட்டில் அறைகளின் பூட்டு உடைப்பு?

பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறையின் கதவை தலைமைச் செயலக அதி... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை வருவாய் அதிகரிப்பு! தமிழக அரசு பெருமிதம்!

தமிழக சுற்றுலாத் துறையில் வருவாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.2024ஆம் ஆண்டில், உலகளவில் ஏறத்தாழ 140 கோடி சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 11 சதவிகிதம் அதிக... மேலும் பார்க்க

வதந்திகளை நம்பாதீர்கள்; திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) பொதுக்குழு நடைபெறும்: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ... மேலும் பார்க்க