செய்திகள் :

பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!

post image

ஹர்பஜன் சிங்கிடம் பேச மறுத்த தனது மகள் குறித்து முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் இந்திய வீரர்களான ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் இருவரும் ஐபிஎல் போட்டியின்போது மோதிக்கொண்டார்கள்.

மும்பை அணிக்காக ஹர்பஜனும் பஞ்சாப் அணிக்காக ஸ்ரீசாந்தும் விளையாடினார்கள்.

ஐபிஎல் 2008-இல் ஒரு போட்டியின்போது ஹர்பஜன் சிங் கோபத்தில் ஸ்ரீசாந்தை கண்ணத்தில் அறைந்துவிடுவார்.

இதற்காக ஹர்பஜன் சிங் 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடைசெய்யப்பட்டார்.

வருந்திய ஹர்பஜன் சிங்...

பின்னர், ஓர் நாளில் ஸ்ரீசாந்த்தின் மகளிடம் ஹர்பஜன் ஆசையாகப் பேச முயன்றபோது அந்தச் சிறுமி, “உங்களிடம் பேச முடியாது. நீங்கள் என் தந்தையை அடித்தவர்” எனக் கூறினார்.

இதனால் மனமுடைந்த ஹர்பஜன் அஸ்வின் நேர்காணலில் மிகவும் வருத்தமாகப் பேசினார். தன் வாழ்வில் அந்த ஒரு பகுதியை மட்டும் நீக்கிவிட வேண்டுமெனக் கூறினார்.

சூதாட்ட புகாரிலிருந்து வெளிவந்த ஸ்ரீசாந்த் உள்ளூர் போட்டிகளில் கம்பேக் அளித்தாலும் ஐபிஎல் அல்லது தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஹர்பஜன் சிங் தான் செய்த தவறுக்காக பலமுறை மன்னிப்பு கேட்டும் தன் மகள் இப்படி நடந்துகொண்டது குறித்து ஸ்ரீசாந்த் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:

மகளுக்குப் புரிய வைக்க முயன்றோம்...

’இதுதான் பாஜி பா, இவர் என்னுடம் விளையாடி இருக்கிறார்’ என ஒருமுறை எனது மகளை ஹர்பஜனிடம் அறிமுகம் செய்தேன். எனது மகள் அவரிடம் நேரடியாகவே பேச முடியாது எனக் கூறிவிட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

பள்ளிக்கூடங்களில் இது குறித்து பலவிதமாகப் பேசியிருக்கிறார்கள் போலிருக்கிறது. நாங்கள் எவ்வளவோ புரிய வைக்க முயன்றும் அவள் மறுத்துவிட்டாள்.

அடுத்த நால் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டின்போது நாங்கள் அவளுக்கு அவர் என் அண்ணன் மாதிரி எனப் புரிய வைத்தோம்.

ஹர்பஜன் வேண்டுமென்றே அதைச் செய்தார் என நினைக்கவில்லை. ஆட்டத்தின் போக்கில் அது நடந்து விட்டது. இது எங்கள் இருவருக்கும் ஒரு கற்றல் அனுபவம்தான் என்றார்.

Former player Sreesanth's statement about his daughter refusing to speak to Harbhajan Singh has caused a stir.

கடைசி டி20யில் ஆஸி. பந்துவீச்சு: அணியில் 3 மாற்றங்கள்!

தென்னாப்பிரிக்கா உடனான 3-ஆவது மற்றும் கடைசி டி20யில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஆஸி.க்கு சுற்றுப் பயணம் செய்துள்ள தெ.ஆ. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரண்ட... மேலும் பார்க்க

ஆஸி. முன்னாள் கேப்டன் பாப் சிம்சன் காலமானார்!

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாப் சிம்சன் 89 வயதில் காலமானார். 257 முதல்தர கிரிக்கெட்டில் 21,029 ரன்களை குவித்த இவர் ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் 4,869 ரன்கள் எடுத்துள்... மேலும் பார்க்க

ஆக்ரோஷமல்ல, வேட்கை..! விராட் கோலி குறித்து ஸ்ரீசாந்த்!

இந்திய அணி வீரர் விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டம் அவரது பேர் ஆர்வத்தினால் வருகிறது எனக் கூறியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி களத்தில் எப்போதும் ஆக்ரோஷமான... மேலும் பார்க்க

தெ.ஆப்பிரிக்க தொடர்: இங்கிலாந்து அணியில் சோனி பேக்கருக்கு முதல்முறை வாய்ப்பு!

தென்னாப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சோனி பேக்கருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி 3 ட... மேலும் பார்க்க

21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!

அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி கேப்டனாக 21 வயதான இளம் வீரர் பெத்தேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில... மேலும் பார்க்க

மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!

ஆஸ்திரேலியா ஏ மகளிரணியை 49.5ஆவது ஓவரில் வீழ்த்தி இந்தியா ஏ மகளிரணி தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய மகளிரணி 3 டி20 போட்டிகளில் 0-3 எனத் தோல்வியுற்றது. அடுத்து ... மேலும் பார்க்க