செய்திகள் :

ராமநாதபுரம்: தேசியக் கொடி வடிவத்தில் கேக்; வெட்டி கொண்டாடிய அதிகாரிகள்; சர்ச்சையான பின்னணி என்ன?

post image

ராமநாதபுரத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சமாதான புறாக்களைப் பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தேசிய கொடிக்கு மரியாதை செய்த அதிகாரிகள்

இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் சிறப்பாகப் பணியாற்றிய 75 காவல்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 229 அலுவலர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கியதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அணிவகுப்பு மரியாதை
அணிவகுப்பு மரியாதை

இவ்விழாவில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளைச் சேர்ந்த 1227 மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

அப்போது தனியார் பேக்கரி நிறுவனத்தினரால் தேசியக் கொடி வடிவத்தில் தயாரிக்கப்பட்ட கேக் விழா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. மூவர்ண நிறங்களுக்கு மத்தியில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டிருந்த 79 கிலோ எடையிலான அந்த கேக்கினை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் வெட்டினர்.

கேக் வெட்டிய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்
கேக் வெட்டிய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்

நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் தேசியக் கொடிக்கென மரியாதையினைச் செலுத்திய நிலையில், தேசியக் கொடியின் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கினை மாவட்ட அதிகாரிகள் வெட்டி கொண்டாடியிருப்பது பொது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் விவாத பொருளாக மாறியுள்ளது.

கொண்டாட்டம் என்ற பெயரில் அதிகாரிகள் நடத்திய இது போன்ற செயல்களை வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். அந்த உரையில், ``இந்தியா வலிமையுடன் வளர்ந்து வருகிறது. தாய்நாட்டைப் போற்றுவத... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை: 'தலித்துகள் மனிதர்கள் இல்லையா?'- ஸ்டாலினுக்கு அம்பேத்கர் பேரன் கண்டனம்

சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்தும், தங்களது பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகைக்க... மேலும் பார்க்க

"நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது EPS-ன் ஆளுமை பற்றித் தெரியாதா?" - OPSக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்... மேலும் பார்க்க

ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாமி வீட்டில் பரபரப்பு

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு இருக்கும் திண்டுக்கல் துரைராஜ் நகரில் காலை 7.30 மணி முதலேஅமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதே போல,சீலப்பாடியில்உள்ள அவரது மகன் ஐ.பி.செந்தி... மேலும் பார்க்க

`மும்பை மாநகராட்சி தேர்தலில் தாக்கரே சகோதரர்கள் கூட்டணி அமைத்து போட்டி’ - உத்தவ் கட்சி

மகாராஷ்டிராவில் அக்டோபர் அல்லது நவம்பரில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடக்கும் இத்தேர்தல் உத்தவ் தாக்கரேயிக்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 75 வயது; ஓய்வு பெறுவதில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ்ஸை தாஜா செய்தாரா மோடி? - காங்கிரஸ்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். மோடியின் உரை அந்த உரையின் இடையில், அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்தும் பேசி... மேலும் பார்க்க