செய்திகள் :

Mumbai Rain: விமானம், வாகன போக்குவரத்து பாதிப்பு; நிலச்சரிவால் இருவர் பலி; கனமழையிலும் நடந்த உறியடி

post image

மும்பையில் நேற்று தொடங்கிக் கன மழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பையின் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து முடங்கி இருக்கிறது. காந்தி நகர், கிங்சர்க்கிள், சயான், குர்லா, செம்பூர், அந்தேரி போன்ற பகுதியில் தெருக்களில் மழை நீர் வெள்ளமாக ஓடியது.

சயான் சண்முகானந்தா ஹால் செல்லும் சாலையில் ஒன்றரை அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கிக் காணப்பட்டது. ரயில் தண்டவாளத்திலும் தண்ணீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி வரிசையாக நிற்பதைக் காண முடிந்தது.

மழை தொடர்பாக மும்பை போலீஸார் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ''பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம். தெருக்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. வெளிச்சம் குறைவாக இருக்கிறது" என்று எச்சரித்திருந்தது.

மும்பை மழை
மும்பை மழை

மேற்கு புறநகர்ப் பகுதியில் இரவு முழுவதும் 216 மிமீ அளவுக்கு மழை பெய்திருந்தது. மும்பை நகரப் பகுதியில் 5 மணி நேரத்தில் 130 மிமீ அளவுக்கு மழை பெய்தது. மழையால் ஏற்பட்டுள்ள அவசர நிலையைச் சமாளிக்க போலீஸாரும், மும்பை மாநகராட்சியும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

மும்பை மற்றும் அருகில் உள்ள ராய்கட் பகுதியில் கனமழை பெய்யும் என்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது மும்பை வானிலை ஆய்வு மையம். தொடர் மழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விக்ரோலியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் வீடு ஒன்றின் மீது இடிபாடுகள் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காலையிலிருந்து உறியடி நிகழ்ச்சி மும்பை முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

உறியடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கோவிந்தாக்களுக்கு மாநில அரசு காப்பீடு வழங்கி இருக்கிறது. கனமழையையும் பொருட்படுத்தாமல் கோவிந்தா மண்டல்கள் சார்பாக நூற்றுக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாகச் சென்று மும்பை முழுவதும் உறியடியில் ஈடுபட்டனர்.

தயிர்ப் பானை
தயிர்ப் பானை

உறியடியில் ஈடுபட்டு அதில் தயிர்ப் பானையை உடைப்பவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பல லட்சம் பரிசுகளை அறிவித்து இருந்தனர். தானேயில் அமைச்சர் பிரதாப் சர்நாயக் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உறியடி நிகழ்ச்சியில் கோவிந்தாக்கள் 10 அடுக்கு பிரமிடு அமைத்து தயிர்ப் பானையை உடைத்தனர். அவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 10 அடுக்கு பிரமிடு அமைத்து தயிர்ப் பானை உடைத்தது உலக சாதனையாகக் கருதப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Rain Alert: இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்; 7 மாவட்டங்களில் கனமழை? - வானிலை ரிப்போர்ட்

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதலே தமிழத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்க... மேலும் பார்க்க

Nilgiri: ரெட் அலெர்ட்; பள்ளிகளுக்கு விடுமுறை, சுற்றுலாத்தலங்கள் மூடல்; அவசரகால எண்கள் வெளியீடு

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக மழை மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வரு... மேலும் பார்க்க

Rain Alert: இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை; அடுத்த 6 நாள்கள் மழை எப்படி?! - வானிலை ரிப்போர்ட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஆக.01) கனமழை பெய்ய வாய்ப்புள... மேலும் பார்க்க

ரஷ்யாவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் நாடுகள்

ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் இன்று 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது கம்சாட்கா பகுதியில் நான்கு மீட்டர் உயரம் வரை அலைகள் காணப்பட்டு வருகின்றன. இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்க... மேலும் பார்க்க

Mumbai: வெளுத்து வாங்கும் கனமழை; சாலைகளை சூழ்ந்த வெள்ளம்... போக்குவரத்து பாதிப்பு!

மும்பையில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த பருவமழை, நேற்று இரவு தொடங்கி இன்று வரை பெய்து கொண்டிருக்கிறது. காலையில் இருந்து மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மும்பை மற்றும் புறநகர் பகுதியில் தாழ்வா... மேலும் பார்க்க

ஊட்டி: மீண்டும் தீவிரமடையும் கனமழை, மூடப்படும் சுற்றுலாத் தலங்கள்! | Ooty Rain update

நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், மே மாத இறுதியில் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. ஜூலை தொடக்கத்திலும் பரவலாக கனமழை நீடித்தாலும், அதன்பிறகு மழையின் ... மேலும் பார்க்க