செய்திகள் :

Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்

post image

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். அந்த உரையில், ``இந்தியா வலிமையுடன் வளர்ந்து வருகிறது. தாய்நாட்டைப் போற்றுவதில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு வணக்கம். அரசியலமைப்பு நமது வழிகாட்டும் சக்தி. இயற்கை நம்மை சோதிக்கிறது. எனது நிலம் தாகமாக இருக்கும்போது எதிரிகளின் மண்ணுக்கு நீர்ப்பாசனம் செய்ய சிந்து நீர் பயன்படுத்தப்பட்டது. இப்போது, இந்தியாவும் அதன் விவசாயிகளும் அதற்குச் சொந்தமான தண்ணீரில் உரிமைகளைப் பெறுவார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பொருளாதார சுயநலம் அதிகரித்து வருகிறது. நாம் நமது சொந்த பாதையை வகுக்க வேண்டும். தேவையற்ற இணக்கங்களை நாம் களைந்துள்ளோம். வருமான வரி உட்பட மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வந்தோம். இந்த சீர்திருத்தங்கள் பொருளாதார அரங்கிற்கு அப்பாற்பட்டவை. ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வரிச்சுமையைக் குறைத்துள்ளோம். தீபாவளிக்குள் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் விரைவில் பெரிய குறைவு இருக்கும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் பாதையில் உள்ளது. நமது பெரிய பொருளாதார குறிகாட்டிகள் மிகவும் வலுவாக உள்ளன. மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியா மீது நம்பிக்கையுடன் உள்ளன" என உரையாற்றினார்.

மா. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்

பிரதமர் மோடியின் உரை குறித்து சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஒவ்வொரு சுதந்திர தின விழாவின் போதும் வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் மோடி இந்த முறை 103 நிமிடங்கள் பேசி அதிக வடைகளை சுட்டு சாதனை படைத்துள்ளார். வஞ்சனை செய்வாரடி - கிளியே வாய் சொல்லில் வீரரடி என்ற பாரதியின் வரிகள் இவருக்குத்தான் சாலப்பொருத்தம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"RSS ஒருபோதும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை" - மோடியை விமர்சித்த கனிமொழி

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் புகழ்ந்து பேசியதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன."ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டிற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன்மயமான ... மேலும் பார்க்க

MK Stalin: "அமெரிக்கா வரியால், 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்" - பிரதமருக்கு அவசர கடிதம்!

அமெரிக்க அதிபர் இந்தியா மீது விதித்துள்ள 50% வரியினால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்றும், இதனை சமாளிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி ... மேலும் பார்க்க

PMK: "வணக்கம் என்றார்; நானும் வணக்கம் என்றேன்"- அன்புமணியுடன் சமாதானமா என்ற கேள்விக்கு ராமதாஸ் பதில்

தைலாபுரத்தில் இன்று ( ஆகஸ்ட்16) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது, "பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாகச் சில விஷமிகள் வதந்தி பரப்புவதாகச் செய்திகள் வருகின்றன.நாளை ... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு: ஸ்டாலின் முதல் சீமான் வரை தலைவர்கள் நேரில் அஞ்சலி | Photo Album

இல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை: 'தலித்துகள் மனிதர்கள் இல்லையா?'- ஸ்டாலினுக்கு அம்பேத்கர் பேரன் கண்டனம்

சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்தும், தங்களது பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகைக்க... மேலும் பார்க்க

"நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது EPS-ன் ஆளுமை பற்றித் தெரியாதா?" - OPSக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்... மேலும் பார்க்க