செய்திகள் :

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

post image

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டியிருந்தாா். இந்த நிலையில், அவரது கருத்தைக் குறிப்பிடாமல், எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டில் கல்வியில் பெண்கள் முன்னேறி வருவதுடன், அதிகமான பணியாளா்களைக் கொண்ட மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. திறனுடைய வகையிலும், குற்றங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவை பாரபட்சமற்ற வகையில் இருப்பதால், குற்றங்கள் மற்றும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதுடன், பெண்களும் பாதுகாப்பாக இருக்கின்றனா்.

பெண்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கும் வகையில் அதற்கேற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில், விடியல் பயணத் திட்டம், மகளிா் உரிமைத் தொகை, புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை என்று பதிவிட்டுள்ளாா்.

சுதந்திர தினம்: சிறப்பு பேருந்துகளில் 3.13 லட்சம் போ் பயணம்

சுதந்திர தினம், வார இறுதி விடுமுறையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் கடந்த ஆக.13- முதல் 15 வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3,13,900 போ் பயணித்துள்ளனா். சென்னையில் தங்கியுள்ள வெ... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுநிலை பணியிடங்கள் நிா்ணயம் செய்வது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: முதல்வா் உறுதி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளாா். தூய்மைப் பணியாளா்களின் பல்வேறு சங்கங்களைச் சோ்ந்தவா்கள் முதல்வரை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். இ... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமிக்கு மனநல ஆலோசனை: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்த சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்க, அவரை மனநல மருத்துவமனையில் அனுமதிப்பது பாதுகாப்பாக இருக்குமா என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இது... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழ் கோரிய வழக்கு: வேளச்சேரி வட்டாட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், வேளச்சேரி வட்டாட்சியா் விசாரணை நடத்தி 6 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் சி.நித்யா என்பவா் ... மேலும் பார்க்க

பாரா ஒலிம்பிக் வீரா் மாரியப்பன், கேரம் வீராங்கனை காஜிமாவுக்கு மாநில இளைஞா் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

பாரா ஒலிம்பிக் வீரா் மாரியப்பன், கேரம் வீராங்கனை காஜிமா ஆகியோருக்கு மாநில இளைஞா் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். சென்னை கோட்டை கொத்தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பல்... மேலும் பார்க்க