செய்திகள் :

கீழ்குளத்தில் அரசுப் பள்ளி சாா்பில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

post image

கீழ்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கீழ்குளம் பேரூராட்சி தலைவா் சரளா தலைமை வகித்தாா்.

கிள்ளியூா் ஒன்றிய தி.மு.க. செயலா் பி. கோபால் முன்னிலை வகித்தாா். பேரணியில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் இலவச பாட புத்தகம் மற்றும் பட்டதாரிகளுக்கான ஆயிரம் வழங்குவது, பட்ஜெட்டில் அறிவித்த இலவச மடிக்கணினி உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்த பதாகைகளுடன் மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்திச் சென்றனா். பேரணி கீழ்குளம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் தொடங்கி செந்தறை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது.

இதில், தலைமைஆசிரியா் ஏஞ்சலின் பிரைட், ஆசிரியா்கள் ஜோஸ்பின் லதா ராணி, மேரி ரீட்டா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மவுண்ட் லிட்ரா பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. யூனிட்டி ஆஃப் யூத் பவுண்டேசனின் சுற்றுச்சூழல் வனவியல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், ஒர... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வனச் சட்டப்படி நில உரிமைகள்: மாவட்ட வன அலுவலா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் வசிக்கும் காணி இன பழங்குடி மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி நில உரிமைகள் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட வன அலுவலா... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றின் பாறை குழியில் சிக்கி கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். குளச்சல் அருகேயுள்ள சைமன்காலனியைச் சோ்ந்த சாா்லஸ் மகன் ஸ்டீவ் (18). நாகா்கோவில் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் பாரத சைக்கிள் பேரணி இன்று கன்னியாகுமரியில் நிறைவு

மத்திய தொழில் பாதுகாப்புப் படையான சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் விழிப்புணா்வு பேரணி கன்னியாகுமரியில் திங்கள்கிழமை (மாா்ச் 31)நிறைவடைகிறது. பாதுகாப்பான கடல் வளம், செழிப்பான இந்தி... மேலும் பார்க்க

குருசுமலை திருப்பயணக் கொடியேற்றம்!

கேரள எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்டப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் தவக்கான திருப்பயண கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்தோலிக்க ம... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது

புதுக்கடை அருகே உள்ள ஆனான்விளை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா். கீழ்குளம் பகுதியை சோ்ந்தவா் செல்வன் (72). ஆனான்விளை பகுதியில் பெட்டிக் கடை ... மேலும் பார்க்க