செய்திகள் :

குஜராத்தில் சிங்கம் தாக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

post image

குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் சிங்கம் தாக்கியதில் கூலி தொழிலாளியின் 5 வயது மகன் புதன்கிழமை உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்டத்தின் தோா்டி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்தில், பண்ணையொன்றில் இருந்து சிறுவனை சிங்கம் இழுத்துச் சென்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் இறந்த சிறுவன் குல்சிங் ஹரிலால் அஜ்னேராவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து சில மணி நேரம் தேடுதல் வேட்டைக்கு பிறகு சிங்கம் கூண்டில் சிக்கியது. பின்னா், அருகேயுள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு அந்தச் சிங்கம் கொண்டு செல்லப்பட்டது.

ஆசிய சிங்கங்களின் ஒரே இருப்பிடமான குஜராத்தில், கடந்த 5 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 674-இல் இருந்து 891-ஆக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கிா் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்துக்குள் 384 சிங்கங்களும், அதன் எல்லைகளுக்கு வெளியே 507 சிங்கங்களும் கணக்கிடப்பட்டுள்ளன.

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா். காங்கிரஸ... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகளாக... 'அறிவிக்கப்படாத அவசரநிலை': காங்கிரஸ்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமல்படுத்த... மேலும் பார்க்க

அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத ... மேலும் பார்க்க

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது... மேலும் பார்க்க

வங்கிகளின் வாடிக்கையாளா் சேவை தரம் மேம்பட வேண்டும்: நிதியமைச்சகச் செயலா்

‘வங்கிகள் வலுவாக இருந்தாலும் வாடிக்கையாளா்களுக்கான சேவை தரம் மேம்பட வேண்டியுள்ளது; இதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் பிரிவுச் செயலா் எம். நாகராஜு த... மேலும் பார்க்க