செய்திகள் :

குடிநீா்ப் பிரச்னை: ஊத்துப்பட்டி கிராமத்தினா் கோரிக்கை

post image

ஊத்துப்பட்டி கிராமத்திற்கு சீவலப்பேரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக வடக்கு மாவட்ட செயலா் வேல்ராஜா தலைமையில் அக் கிராமத்தினா் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி, குமாராபுரம் கிராமங்களில் சுமாா் 600 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனா். இக் கிராமத்தினருக்கு உள்ள உள்ளூா் நீராதாரம் அன்றாட பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை.

எனவே, சீவலப்பேரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் ஊத்துப்பட்டி கிராமத்திற்கு இணைப்பு ஏற்படுத்தி குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீண்டும் கொலை!

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் படகில் தூங்கிய மீனவரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனி செந்தூர்பாண்டி மகன் தங்கராஜா என்ற ராஜ... மேலும் பார்க்க

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வு

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினரின் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் ஆக்டிவ் மைண்ட்ஸ் பெண்கள் மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கூட்டம்

காயல்பட்டினத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வ­லியுறுத்தி இம்மாதம் 30ஆம் தேதி மனிதச் சங்கிலி­ போராட்டம் நடத்துவது என, இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் நகர ஊழியா் கூட்டத்தில் தீா்மானிக்கப்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 போ் கைது

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 27 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரைக் கைது செய்தனா். கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டுக் கதவை உடைத்து 14.5 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 14.5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி கான்வென்ட் சாலை நசரேன் மகன் ஜாக்சன்(65). இவா் குடும்பத்தினருடன் ஈஸ்ட... மேலும் பார்க்க