செய்திகள் :

குடியரசுத் தலைவருக்கு கெடு: அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

post image

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்ட கால வரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை எனக் கூறி தமிழக அரசு உச்சநீ திமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது. அதில், 10 மசோதாக்கள் மீது உரிய முடிவெடுக் காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், மாநில அரசால் நிறை வேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக் குள் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டது.

இந்தக் காலவரம்பு குறித்து 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கேட்டு ஒரு குறிப்பை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அனுப்பியிருந்தார்.

குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை மேற்கொண்டு, இந்தவழக்கில் மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.

மத்திய அரசு: இந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் முன்மொழிவு குறிப்பு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு மசோதாவை நிறுத்திவைப்பதற்கான விருப்புரிமை அரசமைப்பு ரீதியாக குடியரசுத் தலைவர், ஆளுதருக்கு உள்ளது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவருக்கு அரசமைப்பில் எந்தவொரு வெளிப்படையான காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை.

அப்படியிருக்கையில், நீதித் துறை காலக்கெடு விதிப்பது அரசமைப்பின் நோக்கத்தை தோல்வியுறச் செய்துவிடும்; அரசமைப்புச் சீர்குலைவுக்கும் வழிவகுத்துவிடும். ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நீதித்துறை காலக்கெடு விதித்தது அரசமைப்புச் செயல்பாட்டில் ஒரு குழப்பத்தையும், சிக்கலையும் உருவாக்கியுள்ளது.

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நீதித் துறை காலக்கெடு விதிப்பது அரசமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு சமமாகும். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்து வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என அதில் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

விசாரிக்கக் கூடாது: தமிழக அரசு:

தெளிவுரை கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறிப்பு அனுப்பிய தற்கு ஆட்சேபம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துபூர்வவாதத்தை தாக்கல் செய்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கால நிர்ணயம் தொடர்பாக விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கோரி அனுப்பிய குறிப்பை விசாரிக்கத் தேவையில்லை.

ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட விவகாரத்தை குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்காக மாற்றமுடியாது. அரசியல் காரணங்களுக்காக எழுப்பப்படும் இதுபோன்ற கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்காமல் நிராகரிக்கலாம். அதற்கான அதிகாரம் உள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பை பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரின் ரோகிணி பகுதியில் மொத்தம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்... மேலும் பார்க்க

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

தற்சாா்புடைய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவா் வாஜ்பாய் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா். முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனத்... மேலும் பார்க்க

‘ஜிஎஸ்டி 2.0’ எளிமையாக இருக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 வளா்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும்’ என காங்கிரஸ் சனிக்கிழமை கோரிக்கை வைத்தது. மேலும், அடுத்தகட்ட ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் குறித்து அதிகாரபூா்வ ஆய்... மேலும் பார்க்க

எல்லைப் பேச்சுவாா்த்தை: சீன வெளியுறவு அமைச்சா் நாளை இந்தியா வருகை

எல்லை விவகாரங்கள் தொடா்பான 24-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை (ஆக.18) வரவுள்ளாா். இத்தகவலை, இந்திய வெளியுறவு அமைச்ச... மேலும் பார்க்க