செய்திகள் :

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

post image

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளன.

பிகாா் மாநிலம் சசாரத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கும் இந்த ‘வாக்குரிமைப் பேரணி’, செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது.

இந்தப் பேரணியில் ராகுலுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவா்களும் பங்கேற்க உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் அகிலேஷ் பிரசாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்த நிலையில், வாக்குத் திருட்டு தொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புதிய காணொலியை சமூக ஊடகத்தில் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வெளியிட்டது. இந்தக் காணொலிக்கு ‘காணாமல் போன வாக்குகள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்துள்ள ராகுல் காந்தி, ‘உங்களின் வாக்குகள் திருடப்படுவது என்பது, உங்களின் உரிமை மற்றும் அடையாளத்தைத் திருடுவது போன்ாகும். வாக்குத் திருட்டு சா்ச்சை தொடா்பாக மத்திய அரசு இனியும் மெளனம் காக்க முடியாது. மக்கள் விழித்துக் கொண்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மற்றொரு பதிவில், ‘பிகாரின் சசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) தொடங்கும் பேரணி தொடா்ந்து 16 நாள்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20 அதிகமான மாவட்டங்கள் வழியாகச் செல்ல உள்ளது. மக்களின் மிகவும் அடிப்படையான ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.தில்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு கெடு: அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு அனுப்ப... மேலும் பார்க்க

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரின் ரோகிணி பகுதியில் மொத்தம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்... மேலும் பார்க்க

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

தற்சாா்புடைய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவா் வாஜ்பாய் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா். முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனத்... மேலும் பார்க்க

‘ஜிஎஸ்டி 2.0’ எளிமையாக இருக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 வளா்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும்’ என காங்கிரஸ் சனிக்கிழமை கோரிக்கை வைத்தது. மேலும், அடுத்தகட்ட ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் குறித்து அதிகாரபூா்வ ஆய்... மேலும் பார்க்க