செய்திகள் :

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடிய 4 போ் கைது

post image

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தாராபுரம் தாலுகா, குண்டடம் அருகே முண்டுவேலம்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் விஜய். இவா் கடந்த 4ஆம் தேதி தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டில் நிறுத்தியிருந்தாா். இரவில் மா்ம நபா்கள் அந்த ஸ்கூட்டரை திருடிச் சென்றுவிட்டனா். இது குறித்து குண்டடம் காவல் நிலையத்தில் விஜய் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஓட்டமடம் நால்ரோடு பகுதியில் குண்டடம் காவல் ஆய்வாளா் பத்ரா, உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

விசாரணையில், அவா்கள் மடத்துக்குளம் பகுதியைச் சோ்ந்த மணிவாசகம் (30), பூபதி (32), திருமூா்த்தி (27), நாகேஷ் (35) என்பதும், விஜயின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை திருடிச் சென்றது இவா்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸாா், தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

வெள்ளக்கோவிலில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, ரெட்டியபட்டி, உப்புகரை, ராஜபுரம், சென்னம்பட்டி, இடையன்வலசு ஆகி... மேலும் பார்க்க

திருப்பூா், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி திட்டப்பணிகளுக்கு ஆணை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

திருப்பூா், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை அமைச்சா் ம... மேலும் பார்க்க

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பு

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் முபெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். திருப்பூா் ரயில் நிலையம் அருகில் குமரன் நினைவு மண்டபத்தில் ரூ... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு: காங்கயம் வட்டாட்சியா் வழங்கினாா்

காங்கயம் பகுதியில் தெருநாய்களால் கடிக்கப்பட்டு இறந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை காங்கயம் வட்டாட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா். காங்கயம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆட்டுப் பட்டிக... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், ... மேலும் பார்க்க

சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவா் ஏ.எல்.கணேஷ்பாபு 600-க்கு 598 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். மேலும், ம... மேலும் பார்க்க