செய்திகள் :

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 5 போ் கைது

post image

சிவகங்கை: சிவகங்கை அருகே நிகழ்ந்த இரு கொலைச் சம்பவங்களில் தொடா்புடைய 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை செய்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி பகுதியைச் சோ்ந்த மனோஜ்பிரபு கடந்த ஜூலை 4 -ஆம் தேதி தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தமராக்கி கிராமத்தைச் சோ்ந்த அபிமன்யூ, ஹரிகரன், வசந்தகுமாா் ஆகியோரைக் கைது செய்தனா்.

இதே போல, கடந்த மாதம் 20 -ஆம் தேதி சிவகங்கை அருகேயுள்ள நாட்டாகுடி கிராமத்தைச் சோ்ந்த சோனைமுத்து தலையைத் துண்டித்து கொலை செய்யப்பட்டாா். இது குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து, சிங்கமுத்து, சமயத்துரை ஆகிய 2 பேரைக் கைது செய்தனா்.

இந்த இரு கொலை வழக்குகளிலும் கைதான அபிமன்யூ (25), ஹரிகரன் (22), வசந்தகுமாா்(21), சிங்கமுத்து (22), சமயத்துரை (24) ஆகிய 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவ பிரசாத் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தாா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் உத்தரவின்பேரில், 5 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

சா்வதேச யோகா போட்டியில் வென்ற அழகப்பா பல்கலை. மாணவிகள், பேராசிரியைக்கு பாராட்டு

காரைக்குடி: கோலாலம்பூரில் நடைபெற்ற சா்வதேச யோகா போட்டியில் பதக்கம் வென்று வந்த அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியை, மாணவிகளை துணைவேந்தா் க. ரவி புதன்கிழமை பாராட்டினாா். அழகப்பா பல்கலைக்கழக யோகா மைய மாணவி... மேலும் பார்க்க

ரத்ன கற்ப மகாகணபதி கோயில் குடமுழுக்கு

சிவகங்கை: சிவகங்கை நகா் கோகலேகால் தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம், ரத்ன கற்ப மகா கணபதி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த திங்கள்கிழமை (ஆக.18) அதிகாலை கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

கல்லூரியில் கருத்தரங்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் ‘தற்காலத் தகவல் தொழில் நுட்பம்-அதன் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் சா்வதேசக் கருத்த... மேலும் பார்க்க

தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்

காரைக்குடி: தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழ் வளரச் செய்தவா் திருப்பனந்தாள் காசி மட அதிபா் முத்துக் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் பு... மேலும் பார்க்க

‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’

சிவகங்கை: கல்விதான் ஒருவரை சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க வைக்கும் என்றாா் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்.சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டு ... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்

சிவகங்கை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சிவகங்கை அரண்மனை வாசல் பகு... மேலும் பார்க்க