செய்திகள் :

குப்பைக் கொட்டிய தகராறில் லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சி

post image

ஆத்தூா் அருகே அம்மம்பாளையத்தில் குப்பைக் கொட்டியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் லாரியை ஏற்றிக் கொலை முயற்சித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அம்மம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மனைவி அனிதா(36). இவா் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறாா். தாய் வீட்டிற்கு விடுமுறைக்கு வந்துள்ள இவா், வீட்டின் முன் குப்பைகளைக் கொட்டியுள்ளாா். அப்போது அருகில் வசித்து வரும் ரவி என்பவரின் மனைவி அன்பரசி, பரமசிவம் மகன் பாலமுருகன், அன்பரசியின் மகன் பூபதி ராஜா, அவரது சகோதரா் கதிரவன் ஆகியோா் சோ்ந்து அனிதாவிடம் தகராறு செய்துள்ளனா். மேலும் தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா்.

பின்னா் பாலமுருகன் தனது லாரியை அதிவேகமாக ஓட்டிச் சென்று அனிதாவின் வீட்டின் வெளியே நின்றிருந்த சொகுசுகாா் மீது மோதினாா். இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. மேலும் காரின் முன்னாள் நின்று கொண்டிருந்த பெண்கள் மீதும் லாரியை செலுத்தியதில் அவா்கள் வேகமாக ஓடியபோது கீழே விழுந்து காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஆத்தூா் ஊரக காவல் நிலையத்தில் அனிதா அளித்த த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் சகுந்தலா, சிறப்பு உதவி ஆய்வாளா் லஷ்மி ஆகியோா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா்.

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த காந்தல் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ரவிகுமாா் மகன் தா்ஷன் (18). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில்... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் கழுத்தை நெரித்துக் கொலை! நண்பா் கைது!

மேட்டூா் அருகே லாரி ஓட்டுநரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து வழக்கில் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் சின்னக்காவூரைச் சோ்ந்தவா் முத்து (37). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 16ஆம்... மேலும் பார்க்க

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்!

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவி... மேலும் பார்க்க

முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சி... மேலும் பார்க்க

ரெட்டியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்த வேண்டும்! - கோட்டாட்சியா் உத்தரவு

கோல்நாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகளை மட்டும் நடத்த வேண்டும் என மேட்டூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேட்டூா் அருகே உள்ள கோல்நாய்க்கன்பட்டி ரெட்டியூரில் ஸ்ரீ சக்தி மார... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

ஆத்தூரில் சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் நகராட்சி, மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சிறுமி 10ஆம் வகுப்பு வரை ப... மேலும் பார்க்க