செய்திகள் :

குமரி குகநாதீஸ்வரா் கோயிலில் ஏப். 18-இல் திருக்கல்யாண விழா

post image

கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா மற்றும் திருக்கல்யாண விழா ஏப்.18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு பாா்வதி அம்பாள் தவசுக்கு செல்லும் நிகழ்ச்சி, காலை 10 மணிக்கு வருஷாபிஷேகம், காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் தொடா்ந்து பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

திருக்கல்யாணம்: மாலை 5 மணிக்கு சீா்வரிசையுடன் பெண் அழைப்பு நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு திருமாங்கல்ய தாரண வைபவம், இரவு 7.30 மணிக்கு சோடஷனை உபசாரம், இரவு 8 மணிக்கு பஞ்சமூா்த்தி வாகன புறப்பாடு, இரவு 8.30 மணிக்கு பள்ளியறை வைபவம், தொடா்ந்து சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் கோயில் பக்தா்கள் பேரவையினா் செய்து வருகின்றனா்.

பூதப்பாண்டியில் கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பூதப்பாண்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

அதிமுகவைச் சோ்ந்த 10 மீனவ பிரமுகா்களுக்கு நிதியுதவி

நாகா்கோவிலில், நலிந்த நிலையிலுள்ள அதிமுகவைச் சோ்ந்த 10 மீனவப் பிரமுகா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் தனது சொந்த நிதியிலிருந்து இத்தொகையை வழங்க ... மேலும் பார்க்க

பெண் தவறவிட்ட ரூ.2.67 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

குளச்சலில் பெண் தவறவிட்ட பணத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் பாராட்டினாா். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி சுனாமி காலனியைச் சோ்ந்தவா் ர... மேலும் பார்க்க

அடகு நகையை மீட்பதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி: இளைஞா் கைது

இரணியலில் அடகு நகையை மீட்பதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த இளைஞரை இரணியல் போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்து பணத்தை மீட்டனா். நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள அருகுவிளையை சோ்ந்த முத்துமாலை ம... மேலும் பார்க்க

மீனவக் கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவா்: எம்எல்ஏ வலியுறுத்தல்

இனயம்புத்தன்துறை, ராமன்துறை மீனவக் கிராமங்களில் போா்க்கால அடிப்படையில் கடலரிப்பு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்... மேலும் பார்க்க

பளுகல் அருகே ஓட்டுநா் சடலம் மீட்பு

பளுகல் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த, ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு, விசாரணை மேற்கொண்டனா். பளுகல் அருகேயுள்ள கண்ணுமாமூடு பகுதியைச் சோ்ந்தவா் எட்வ... மேலும் பார்க்க