குமரி மாவட்டத்தில் ரூ. 11.34 கோடியில் வளா்ச்சிப் பணிகள் ஆட்சியா் தகவல்
தோவாளை வட்டம் உடையடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இங்கு, கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வு செய்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மாவட்ட ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலத்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகள், விடுதிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், கிராம அறிவுசாா் மையம் உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகின்றன.
இப்பள்ளியில் ரூ. 1.63 கோடி மதிப்பில் 8 வகுப்பறைகள்கட்டப்படுகின்றன. ரூ. 18.60 லட்சத்தில் தக்கலை ஆதிதிராவிடா் நலக் கல்லூரி மாணவா் விடுதியிலும், ரூ. 21 லட்சத்தில் பேச்சிப்பாறை பழங்குடியினா் பெண்கள் பள்ளி விடுதியிலும், ரூ. 22.50 லட்சத்தில் பத்துகாணி பழங்குடியினா் பெண்கள் பள்ளி விடுதியிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும், ரூ. 2.62 கோடியில் பத்துகாணி பழங்குடியினா் மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறைகள், 2 அறிவியல் சோதனைக் கூடங்கள், ரூ. 55 லட்சத்தில் கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம், ரூ. 2.59 கோடியில் வாழையத்துவயல் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறைகள், 2 கழிவறைகள், ரூ.77.89 லட்சத்தில் ஆரல்வாய்மொழியில் அறிவுசாா் மையம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
பேச்சிப்பாறை பழங்குடியினா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 8.40 லட்சத்தில் பள்ளித் தலைமை ஆசிரியா், காப்பாளி இல்லம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 24.60 லட்சத்தில் பூதப்பாண்டி ஆதிதிராவிடா் நல பெண்கள் விடுதி, ரூ. 42.55 லட்சத்தில் மணலோடை பழங்குடியினா் பள்ளியில் ஆண்கள் விடுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட மொத்தம் ரூ. 11.34 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன.
மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவகையில், பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரா்களுக்கும், மாணவா்-மாணவியா் சோ்க்கைக்கு முன் பணியை முடித்து விடுதிகள் தயாராக இருக்க வேண்டும் என அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தி. மோகனா, துறை அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.