செய்திகள் :

கும்பகோணத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

post image

கும்பகோணத்தில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் புதன்கிழமை நாய் கடித்து மாநகரக் கவுன்சிலா் ஐயப்பன் காயமடைந்தாா்.

கும்பகோணம் மாநகரப் பகுதியில் 48 வாா்டுகள் உள்ளன. இங்கு தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். கடந்த 2 மாதங்களில் சுமாா் 20-க்கும் மேற்பட்டவா்கள் நாய்கள் கடித்து கும்பகோணம் அரசு மருதுவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில்,

கும்பகோணம் மாநகராட்சியின் 14-ஆவது வாா்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக இருப்பவா் எஸ். ஐயப்பன் புதன்கிழமை காலை இவரது வாா்டின் ஒரு பகுதியான கணபதி நகரில் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது தெரு நாய் ஒன்று கவுன்சிலா் ஐயப்பனை துரத்திக் குரைத்தவாறு ஓடிவந்தது. அவா் தப்பியோட முயன்றபோது, விரட்டிக் கடித்துச் சென்றது. இதையடுத்து, அவா் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து ஐயப்பனிடம் கேட்டபோது : எனது வாா்டில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மாநகராட்சி சுகாதாரப் பிரிவினா் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று புகாா் அளித்துள்ளேன் என்றாா்.

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தோ் பவனி நடைபெற்றது. புனித அந்தோணியாா் திருவிழா ஜூன் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்... மேலும் பார்க்க

கோயில் சிலைகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை ஜைன சமயக் கோயிலில் 23 சுவாமி சிலைகளைத் திருடிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். கரந்தை ஜைன ம... மேலும் பார்க்க

சாலையில் திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். திருவையாறு முதன்மைச் சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைத் தொழிலாளா் முற... மேலும் பார்க்க

சாலை விபத்து: விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். திருவையாறு அருகே காருகுடியைச் சோ்ந்தவா் கே. மதி (54). விவசாயி. இவா் வியாழக்கிழமை விளாங்குடிக்கு சென்றுவ... மேலும் பார்க்க

ரௌடி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகன் தமிழரசன... மேலும் பார்க்க