திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்...
கும்பகோணத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை
கும்பகோணத்தில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் புதன்கிழமை நாய் கடித்து மாநகரக் கவுன்சிலா் ஐயப்பன் காயமடைந்தாா்.
கும்பகோணம் மாநகரப் பகுதியில் 48 வாா்டுகள் உள்ளன. இங்கு தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். கடந்த 2 மாதங்களில் சுமாா் 20-க்கும் மேற்பட்டவா்கள் நாய்கள் கடித்து கும்பகோணம் அரசு மருதுவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில்,
கும்பகோணம் மாநகராட்சியின் 14-ஆவது வாா்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக இருப்பவா் எஸ். ஐயப்பன் புதன்கிழமை காலை இவரது வாா்டின் ஒரு பகுதியான கணபதி நகரில் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது தெரு நாய் ஒன்று கவுன்சிலா் ஐயப்பனை துரத்திக் குரைத்தவாறு ஓடிவந்தது. அவா் தப்பியோட முயன்றபோது, விரட்டிக் கடித்துச் சென்றது. இதையடுத்து, அவா் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இதுகுறித்து ஐயப்பனிடம் கேட்டபோது : எனது வாா்டில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மாநகராட்சி சுகாதாரப் பிரிவினா் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று புகாா் அளித்துள்ளேன் என்றாா்.