செய்திகள் :

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு; அடுத்து எவற்றுக்கு?

post image

குறிப்பிட்ட ஒரு ஊரில் உள்ள சிறப்பு மிக்க தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது.

இதன் மூலம் அந்த பொருளும் ஊரும் சிறப்படைகிறது. மேலும், குறிப்பிட்ட அந்த பொருட்களின் வர்த்தகம் அதிகரிக்கிறது.

அந்த பொருள் போலியாக வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

குறிப்பாக தஞ்சாவூர் கலைத்தட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, திண்டுக்கல் பூட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய் உள்ளிட்ட சுமார் 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் காந்தி

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வெற்றிலை, குமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீீடு கிடைத்துள்ளது.

கும்பகோணம் வெற்றிலை குறித்து தமிழ் சினிமாவில் பல பாடல்கள் வெளிவந்துள்ளன. கும்பகோணத்தில் அடையாளங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

பல ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெற்றிலையில் மட்டும் தினமும் குறிப்பிட்ட தொகை வர்த்தகம் நடைபெறுவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், கும்பகோணம் வெற்றிலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இது குறித்து அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கும்பகோணம் வெற்றிலைக்கும்,

தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு கழகம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் மூலம் தோவாளை மாணிக்க மாலை கைவினை கலைஞர்கள் நலசங்கம் சார்பில் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் மாதம் மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது.

தோவாளை மாணிக்க மாலை

இதையடுத்து, சட்ட விதிப்படி நான்கு மாதங்கள் முடிவடைந்து நிலையில், தற்போது புவிசார் குறியீடு கிடைக்க பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. சீரக சம்பா அரிசி, பேராவூரணி தேங்காய், தஞ்சாவூர் கண்ணாடி வேலைப்பாடு, நாதவஸ்வரத்தில் உள்ள சீவாலி உள்ளிட்ட பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க இருக்கின்றன என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேஜிக் பெண்கள் 2.O: பெண் தொழில்முனைவோர்களுக்கான வழிகாட்டுதல்! | Photo Album

மேஜிக் பெண்கள் 2.O: பெண் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி - பிரபலங்களின் அனுபவப் பகிர்வு மேலும் பார்க்க

Roshini Nadar: 'ஹூரூன் பட்டியலில் முதல் இந்தியப் பெண்' - வரலாறு படைத்த HCL தலைவர்; பின்னணி என்ன?

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, 2025 ம் ஆண்டுக்கான ஹுருன் உலக பெண் பணக்காரர்கள் பட்டியலில் (Hurun Global Rich List 2025 for women) இடம் பிடித்து வரலாறு படைத்துள்ளார்.டாப் 10 ... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் இருப்பு உறுதி; 300 கி.மீட்டர் பரப்பளவில் கிணறுகள் அமைக்கும் ONGC.. உ.பி-க்கு ஜாக்பாட்!

இந்தியாவில் பெட்ரோல் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. மும்பை கடல் பகுதி, குஜராத், அஸ்ஸாம் போன்ற பகுதியில் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த நிலையில், புதிதாக உத்தரப்பிரதேச மாநிலம், பல்லி... மேலும் பார்க்க

'அம்பானி முதலிடம்; அதானி அடுத்த இடம்!'- இந்திய பணக்காரர் பட்டியல் வெளியீடு; சொத்து மதிப்பு தெரியுமா?

2023, 2024 என அடுத்தடுத்த ஆண்டுகளில், கௌதம் அதானிக்கு முறையே ஹிண்டன்பர்க் அறிக்கை, சோலார் பேனல் மோசடி போன்ற பிரச்னைகள் வந்தன. இருந்தும், அசராமல் அதில் இருந்து மீண்டு, இந்த ஆண்டு இந்தியாவின் டாப் பணக்க... மேலும் பார்க்க

தைவான் ஷூ உற்பத்தியாளர்களைத் தமிழ்நாடு ஈர்த்தது எப்படி?

தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பி ஜெயலட்சுமிக்கு சுமார் 15 மாதங்களுக்கு முன்பு வரை வாழ்க்கை துன்பமானதாகதான் தோன்றியது. தையல் தொழிலாளியான அவரது கணவரால், குடு... மேலும் பார்க்க

JCOM: தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய 7 கண்கள் என்னென்ன?

சர்வதேச அளவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் JCI அமைப்பு, தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் JCOM (Jaycees chamber of commerce) மூலம் பயிற்சியளித்து வருகிறது. அந்த வகையில், JCOM L MADURAI 1.0 -இன் T... மேலும் பார்க்க