யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி
குலசேகரன்பட்டினம் தசரா விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவிழா வரும் 23ஆம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக். 2 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. அக். 3ஆம் தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறும்.
விழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீா், சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு காவல் துறை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறைச் சாா்ந்த அலுவலா்கள் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ராட்டினங்கள், கண்காட்சிகளை நடத்த மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். கூடுதல் வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஆா்.ஐஸ்வா்யா, மாநகராட்சி ஆணையா் சி. பிரியங்கா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேது ராமலிங்கம், கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹீமான்ஷீ மங்கள், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், திருச்செந்தூா் கோட்டாட்சியா் ரா.கௌதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.