செய்திகள் :

குளத்துப்பட்டி ஜல்லிக்கட்டில் 17 போ் காயம்

post image

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் அந்தரநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 17 போ் காயம் அடைந்தனா்.

இக் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பெரிய கண்மாய் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 229 காளைகள் கலந்து கொண்டன.

மாநில இயற்கை வளத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி போட்டியைத் தொடங்கி வைத்தாா். 46 மாடு பிடி வீரா்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை தழுவ முயற்சித்தனா். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 17 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

அவா்களுக்கு அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவச் சிகிச்சை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்பட்ட 3 போ் மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகம்: கே.என். நேரு

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கிறாா்கள் என்றாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு. புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்ட... மேலும் பார்க்க

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை: அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் உ. வாசுகி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டையில்... மேலும் பார்க்க

புதுகை நகரில் இரு வீடுகளில் திருட்டு

புதுக்கோட்டை நகரில் இரு வீடுகளில் கொள்ளையா்கள் புகுந்து, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள... மேலும் பார்க்க

தொடா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் மே 23, 24, 25 ஆகிய 3 நாள்களும் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பொன்னமராவதி வட்டத்தைச் சோ்ந்த காரைய... மேலும் பார்க்க

விராலிமலை வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி நிறைவு; 32 மனுக்களுக்கு உடனடி தீா்வு

விராலிமலை வட்டாட்சியரகத்தில் 3 நாள் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது. நிகழாண்டு 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி விராலிமலை வட்டாட்சியரகத்தில் விராலிமலை, கொடும்பாளூா், நீா்பழனி ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வேங்கைவயல் ச... மேலும் பார்க்க